தலைமை ஆசிரியையின் மிரட்டலால் மாணவிகள் கண்ணீருடன் வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்த அவலம் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தலைமையாசிரியையான மணிமேகலை என்பவர், பள்ளியில் இருக்கும் கழிவறைகளை சுத்தம் செய்யுமாறு மாணவிகளிடம் கூறியுள்ளார்.
இதற்கு மாணவிகள் மறுத்த நிலையில், கழிவறைகளை சுத்தம் செய்யவில்லை என்றால் பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என மிரட்டியதாக சொல்லப்படுகிறது.இதனால் பயந்த மாணவிகள் வேறு வழியின்றி கழிவறைகளை வெறும் கைகளால் அழுதுகொண்டே சுத்தம் செய்துள்ளனர்.
மணிமேகலை மிரட்டியதால் மாணவிகள் சிலர் இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருந்துள்ளனர்.இதுகுறித்து அவர்களது பெற்றோர் கேட்டபோது அனைத்தையும் அவர்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்