நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி ஜாலியாக பீச் வாலிபால் விளையாடி பொழுதை கழித்தனர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. அங்கு வருகிற 21-ந்தேதி முதல் ஆகஸ்ட் 22-ந்தேதி வரை நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இதற்கு முன் செயின்ட் கிட்ஸில் ஜூலை 9-ந்தேதி (இன்று) முதல் 10-ம் தேதி வரை இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்திலும், 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்திலும் விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்காக இந்திய அணி கடந்த 6-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றது. லண்டன் வழியான நீண்ட பயணத்திற்குப் பிறகு செயின்ட் கிட்ஸ் சென்று அடைந்தது.
கரீபியன் தீவுகளில் மிகவும் பிரபலமான தீவு செயின்ட் கிட்ஸ் ஆகும். இந்த தீவின் வடக்கு பகுதியை கரீபியன் கடலும், கிழக்குப் பகுதியை அட்லாண்டிக் கடலும் சூழ்ந்துள்ளது. நீண்ட பயணத்தினால் களைப்பாய் இருந்த வீரர்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க கடற்கரை ஓரத்தில் பீச் வாலிபால் விளையாடினார்.
அப்போது விராட் கோலி, லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் பனியன் அணியாமல் விளையாட்டில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நீங்களும் விடியோவை பார்க்க கிளிக் செய்க…..