இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கழுதையில் சவாரி செய்ததால் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
மணி பூஷண் சர்மா என்பவரே இந்த வேட்பாளர் ஆவார். பீஹார் மாநிலத்தின் ஜெஹனாபாத் நகரிலுள்ள தொகுதியொன்றில் இவர் போட்டியிட விரும்பினார்.
இதற்காக கடந்த திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜெஹனாபாத் தேர்தல் அலுவலகத்துக்கு கழுதையொன்றின் மீது மணி பூஷண் பயணம் செய்தார்.
இதையடுத்து மிருகவதை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
‘மிருகவதை தடு;ப்புச் சட்டத்தின் கீழ், இந்த அரசியல்வாதிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என ஜெஹனாபாத் பொலிஸ் தலைமை அதிகாரி ஸ்ரீ மணீஷ் தெரிவித்துள்ளார்.
எனினும், என்ன குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் மக்கள் கழுதை சவாரியில் ஈடுபடுவது வழக்கமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.