இதையடுத்து, சிங்கள மாணவர்கள் நிர்வாகப் பிரிவை முற்றுகையிட முனைந்த போது, பதற்ற நிலை ஏற்பட்டது. சிறிலங்கா காவல்துறையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து, காலவரையறையின்றி வளாகத்தை மூடியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களையும் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.
படுகாயமடைந்த அனைவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டன் நகரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சாமிமலை பகுதிக்கு சென்ற குறித்த பேருந்து நேற்றுமாலை 4 மணியளவில் பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறின் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.இந்நிலையில், படுகாயமடைந்த 29 பேரில் 4 பெண்களும், 2 சிறுவர்களும் மற்றும் 23 ஆண்களும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்,குறித்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.