அமைச்சர் மேர்வின் சில்வாவை இனந்தெரியாத இளைஞர் ஒருவர் அச்சுறுத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவின் வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று கொண்டிருக்கும் போது வழக்கு விசாரணை இடைநடுவே ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊடகங்களை சந்திப்பதற்காக அமைச்சர் மன்றுக்கு வெளியில் வரும்போது, அவ்விடத்திற்கு வாகனத்தில் வந்த இனந்தெரியாத இளைஞர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞரை அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிடிக்க முற்பட்ட போதும் மிகவும் வேகமாகச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கொழும்பு, கொள்ளுப்பிட்டியவிலுள்ள இரவு விடுதியில் வைத்து ஸ்கொட்லாந்து பொறியியலாளர் மற்றும் அவருடைய காதலியை தாக்கியதாக மாலக்க சில்வா கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இடமபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிரணியுடன் இணைய மாட்டேன்: மேர்வின் சில்வா
25-11-22014
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா எதிரணிக்கு மாறுவார் என தெரிவிக்கப்பட்ட போதும் எதிரணிக்கு மாறமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அருகில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.