ஐ.எஸ். போராளிகளால் தன்னின சேர்க்கையாளர் ஒருவருக்கு மாடிக் கட்டிடமொன்றில் தள்ளி மரண தண்டனை நிறைவேற்றப்படுவதையும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் போராளிகளால் படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் போடப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தும் புகைப்படங்கள் அந்த போராளிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக்கில் பெயர் குறிப்பிடப்படாத இடத்திலுள்ள மாடிக்கட்டிடத்தின் உச்சியில் நின்ற சுமார் 8 பேரைக்கொண்ட போராளி குழுவால் அந்நபர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
தீவிரவாத சந்தேக நபர்களை சி.ஐ.ஏ. விசாரணைகளின் போது சித்திரவதை செய்ததாக வெளியான செய்திகளையடுத்தே மேற்படி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி புகைப்படங்களில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மூவரது சடலங்கள் வீதியோரத்தில் வேலியில் கட்டப்பட்டிருப்பதை காண்பிக்கும் படங்களும் உள்ளடங்கியிருந்தன.
அந்த மூவரில் ஒருவர் கண் கட்டப்பட்ட நிலையிலும் இருவர் வாய் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர்.