மூன்றாவது தடவையும் தான் ஜனாதிபதியாகத் தெரிவாகுவதற்கேற்ற வகை யில், அரசியலமைப்பில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இப்போது சோதனைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில், உள்நாட்டில் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் கடுமையான சவால்களை முகம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
வரும் நவம்பர் மாதத்துடன், இரண் டாவது முறையாகப் பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள தால், அதற்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் யோசனையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இருப்பதாகத் தெரிகிறது.
தனது முழுப்பதவிக் காலத்தையும் நிறைவு செய்யும் போது, வெற்றி வாய் ப்பு பறி போய்விடுமோ என்ற அச்சம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனென்றால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு வங்கி தொடர்ச்சியான சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. அண்மைய தேர்தல்களில் வெளிப்பட்டுள்ளதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, 2016ஆம் ஆண்டு வரை பொறுமையாக இருப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
எனவே தான், ஜனாதிபதி ஒருவர் பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவ டைந்த பின்னர், அடுத்த தேர்தலுக்கு அழைப்பு விடலாம் என்ற அரசியலமைப்பு சரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிப தித் தேர்தலை நடத்தலாம் என்று ஊகிக்க ப்படுகிறது.
அடுத்த ஆண்டில் ஜனாதிபதித் தேர் தல் நடத்தப்பட்டால், தாம் சுலபமாக வென்று விடுவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, அண்மையில் பேருவளையில் நடந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கருத்த மர்வில் கூறியதாகச் செய்திகள் வெளியாகின.
என்றாலும், அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இப்போது பலவிதமான சவால்களும், கவலைகளும் தோன்றியுள்ளன என்பதை மறுக்க முடியாது.
இவற்றில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை.
முதலாவது, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு, அடுத்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையும் அவரது அரசா ங்கத்தையும் தோற்கடிப்பதற்கு, இலங்கைக்கு வெளியே இருந்து மேற்கொள்ள ப்படும் முயற்சிகள் பற்றிய அச்சம்.
இரண்டாவது, ஜனாதிபதியை தோற்கடிப்பதற்கான பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகளும், பேச்சுக்களும் தொடங்கியிருப்பது.
தமது அரசாங்கத்தைக் கவிழ்க்க, சர்வதேச சதி இடம்பெறுவதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும், அவரது கட்சியினரும் புலம்பிக் கொண்டு திரிகின்றனர்.
இது ஒரு தீவிரமான விவகாரமாக மாறி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் வலுவாக சந்தேகிக்கிறது.
இதனை பல சமயங்களில் பகிரங்கமாகவே அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களும் அதிகாரிகளும் கூறியிருக்கிறார்கள்.
வாக்காளர்களுக்கு விழிப்பூட்டுவதற்கு, யு.எஸ். எயிட் நடைமுறைப்படுத்த விருந்த திட்டம், அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
இது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதி என்று அரசாங்கம் வலுவாக நம்புகிறது.
இதுபோன்று, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பெருமளவு நிதி வந்து குவிவதாகக் கூறும் அரசாங்கம், தற்போது, வெளிநாடுகளிடம் நிதியுதவி பெற முன் அனுமதி பெற வேண்டும் என்று அந்த நிறுவனங்களைப் பணித்துள்ளது.
ஆட்சி மாற்றத்துக்கு வெளிநாடுகள் துணை நிற்பதான அரசாங்கத்தின் சந்தேகத்தின் அடிப்படையில் தான், சிவில் சமூக அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்களை முடக்குகின்ற அல்லது கட்டுப்படுத்துகின்ற காரியங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் கவிழ்ப்பு குறித்த அச்சத்தில் சிக்கியுள்ளதாக கடந்த வாரம் ஏ.எவ்.பி. செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. வெளிநாட்டில் இருந்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ இல்லையோ – அரசாங்கத்தை அந்த சந்தேகமே அரித்துத் தின்னத் தொடங்கி விட்டது என்பதே உண்மை.
இத்தகைய நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி ராக பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத் தும், முயற்சிகள் கொழும்பில் நடந்து கொண்டிருப்பதும் அரசாங்கத்தைக் கவ லை கொள்ள வைத்துள்ளது.
இந்தப் பொதுவேட்பாளர் விடயத்தில் பிரதான அரசியல் கட்சிகளிடத்தில் பெரியளவில் இணக்கப்பாடு ஏற்படாது போனாலும், அரசாங்கத்தை வேறு வகையிலானதொரு நெருக்கடி சூழத் தொடங்கியுள்ளது.
அதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் – கணிசமானளவு பொது இணக்கம் உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடலாம் என்று ஒரு தரப்பினரால் முன்னிறுத்தப்படும், கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரர், எடுத்துள்ள நகர்வு அரசாங்கத்தையே சற்று கலங்க வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அவர் ஏற்கனவே, பொதுவேட்பாளராகப் போட்டியிடத் தயார் என்றும் அறிவித்து விட்டார். இந்தநிலையில், அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தாமல், மிகத் தந்திரமான முறையில், காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பது, சுதந்திர ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவுவது, 17ஆவது திருத்தச்சட்டத்தை மீளவும் நடைமுறைக்கு கொண்டு வருவது போன்றவற் றை முன்னிறுத்தி மாதுளுவாவே சோபித தேரர் எடுத்துள்ள நகர்வுகள், முக்கிய கவனம் பெறுகின்றன.
இவற்றின் மூலம், சோபித தேரர், அர சுத் தரப்பில் உள்ள கட்சிகளையும் ஊடுருவத் தொடங்கியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, விமல் வீர வன்ஸவுடன் பேசப்பட்டுள்ளது. பேராசி ரியர் விதாரண போன்ற இடதுசாரி அமை ச்சர்களுடனும் பேசப்பட்டுள்ளது. அதேவேளை, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது குறித்து, ஜாதிக ஹெல உறும யவின் அத்துரலியே ரத்ன தேரருடன் ரணில் விக்கிரமசிங்க பேசியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, எதற்காக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று, பொதுமேடையொன்றில் ரணில் விக்கிரமசிங்க. இரா.சம்பந்தன், அனுரகுமார திசாநாயக்க, சரத் பொன்சேகா, சந்திரிகா குமாரதுங்க போன்ற தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்திருக்கிறார்கள்.
இவையெல்லாம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையை ஒழிப்பது என்ற விவகாரம் முன்னிலைப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தியுள்ளன.
இன்று பெரும்பாலான எதிர்க்கட்சிகள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
இந்த ஒற்றை இணக்க நிலைப்பாடே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பாக அமையலாம்.
இத்தகைய கட்டத்தில், நிறைவேற்று அதிகாரப் பதவிக்காக மூன்றாவது தடவையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ போட்டியிட்டால், அது வெற்றிவாய்ப்பை குறைத்து விடும்.
இந்தநிலையில், அரசாங்கம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து விடுவதற்கு முயற்சித்தாலும் ஆச்சரியமில்லை. அதுபற்றி அரச உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும் கூடத் தகவல்கள் உள்ளன.
மீண்டும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும், பிரதமருக்கு அதிகாரங்களை அளிக்கும், அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடக் கூடும். அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் அரசாங்கத்திடம் உள்ளது.
அதைவிட, நிறைவேற்று அதிகார ஆட்சியை ஒழிப்பதற்கு எந்தவொரு கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் போவதில்லை.எனவே அதனைச் சுலபமாகவே அரசாங்கத்தினால் செய்ய முடியும். அவ்வாறு செய்தால், அரசாங்கத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.
அதேவேளை, தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுள்காலத்தை, மற்றொரு பதவிக்காலத்துக்கு நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தும் திட்டமும் கூட அரசாங்கத்திடம் உள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால், நிச்சயம், ஆளும்கட்சிக்கு தற்போதுள்ளது போன்று பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பில்லை.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன, 1982ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
அதுபோல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும், சர்வஜன வாக்கெடுப்புக்கு உத்தரவிடலாம். அதற்குரிய அதிகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு உள்ளது.
ஆனால், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதானால், அதனை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு முன்னர் நடத்த வேண்டும்.
முதலில், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்து விட்டு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டால், அரசாங்கம் சிக்கலில் இருந்து தப்பிக் கொள்ளலாம்.
எனவே, அரசாங்கம் தற்போது எழுந்திருக்கின்ற சூழலில், நிறைவேற்று அதிகாரத்துக்காக போராடுவதைக் கைவிட்டு, எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைப்பதே முக்கியமானதாக மாறி வருகிறது.
இந்த புதிய சூழலைச் சமாளிக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வகையில், அரசியலமைப்பைத் திருத்த முனைந்தாரேயானால், அது அவருக்கு அவமானமாகவும் கூட அமையும்.
ஏனென்றால், அவர் தனது மூன்றாவது பதவிக்காலத்தைக் குறிவைத்தே, இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தெரிவானதும் 18ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்திருந்தார்.
அது அவருக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடைகளை அகற்றியது,
ஆனால், தற்போது உருவாகியுள்ள புதிய சூழல், அவர் மூன்றாவது பதவிக்காலத்துக்காக போட்டியிட முடியாத நிலையை உருவாக்கி வருகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அரசாங்கமே ஒழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும் ஜனாதிபதியாக இருக்கும் மகிந்த ராஜபக்சவின் கனவு, நொருங்கிப் போய் விடும்.
நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவியை கைப்பற்றினாலும் கூட, அது இந்த அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அரசியல் ரீதியாகக் கிடைத்த பெருந் தோல்வியாகவே இருக்கும்.