நடிகைகளுக்கு மனிதர்களைப் பிடிக்கிறதோ.. இல்லையோ ஆனால் விலங்குகளை பிடித்துவிடும். அதில் பொலிவுட் நடிகைகளிலிருந்து கொலிவுட் நடிகைகள் வரை யார் யார் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதில் ஒருவர் தான் பொலிவுட் நடிகை இஷா குப்தா.
இவர் ஒரு விலங்குப் பிரியர். பீட்டா ஆதரவாளர். அவருக்கு யாராவது விலங்குகளை அடித்து துன்புறுத்தினால் கோபம் வந்துவிடுமாம். அந்த அளவுக்கு விலங்குகள் மீது பாசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த இஷா, ஒருவர் நாயை அடித்துக் கொடுமைப்படுத்தும் வீடியோவை எனக்கு மேக்கப் போடுபவர் என்னிடம் காண்பித்தார். நான் சமூக வலைத்தளங்களில் இல்லாததால் இது போன்ற வீடியோக்கள் என் கவனத்திற்கு வருவது இல்லை.
எங்கள் வீட்டில் 4 நாய்கள் உள்ளன. அதில் 2 தெருவில் இருந்து எடுத்து வரப்பட்ட நாய்கள். எங்கள் வீட்டு நாய்களில் ஒன்று அண்மையில் இறந்துவிட்டது. அந்த மரணம் என்னை காயப்படுத்தியது. வாய்பேச முடியாத விலங்களுக்கு ஆதரவு அளிப்பவள் நான்.
அந்த நாயை அடித்து துன்புறுத்தியதால் அதன் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். அடிக்கு அடி தான் சரி. நாய்களை அடிக்கும் அந்த நபரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும் என்றார்.
மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள் படும்பாடை பார்க்கையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது போதாது. அரபு நாடுகளைப் போன்று அவர்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றார்.
மூத்த மகளுக்கு கால்ஷீட் தருவாரா ரஜினி?
சென்னை: தங்கை சவுந்தர்யாவைபோல் ரஜினியை இயக்க விரும்புகிறார் ஐஸ்வர்யா.ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா. இவர் ரஜினி நடித்த ‘கோச்சடையான் படத்தை அனிமேஷன் கேப்சர் முறையில் படமாக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்தது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தனது கணவர் தனுஷ் ஹீரோவாக நடித்த ‘3‘ படத்தை இயக்கினார். இதையடுத்து கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘வை ராஜா வை‘ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் ரஜினிக்கு திரையிட்டு காட்டினார். அதைப்பார்த்து பாராட்டு தெரிவித்ததுடன் அடுத்து இயக்கவுள்ள படத்துக்கான கதை பற்றி கேட்டார்.
அப்போது தனது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினியிடம் ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்தார்.
கதை பிடித்திருந்தால் நடிப்பதாக ரஜினி கூறியதாக தெரிகிறது. தற்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘லிங்கா படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக விநாயகர் சதுர்த்தியன்று படத்தின் முன்னோட்ட காட்சியை வெளியிடும் பணியில் மும்முரமாக இருக்கின்றனர். தற்போது கர்நாடகாவில் ஷிமோகா பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது. இத்துடன் படத்தின் வசன காட்சிகள் பகுதி நிறைவு பெறுகிறது.