மதுரை: மதுரையில் ரவுடிகளுக்கு இடையே நடந்த தொடர் மோதலால் தங்கள் தரப்பை கொல்லும் முன்பு 3 பேரை வெட்டிக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாம்பிகை நகர் 8வது தெருவை சேர்ந்தவர் இருளாயி(50). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன்கள் பாம்பு நாகராஜா(19), கருப்பு ராஜா(21) மற்றும் நண்பர் கார்த்திக் ஆகியோர் நேற்று வீட்டில் இருந்தபோது, 10 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் பிரபல ரவுடி ‘அப்பள ராஜாவின் கூட்டாளிகள். மதுரையின் பிரபல ரவுடியான ‘டாக் ரவியின் கூட்டாளிகள் ‘அப்பள ராஜா, ‘கவாத்து திருப்பதி.
ரவி சென்னைக்கு சென்றுவிட்டதையடுத்து மதுரையில் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ராஜாவும், திருப்பதியும் ஈடுபட்டு வந்தனர்.
இதில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், இரு கோஷ்டிகளாக பிரிந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ‘கவாத்து திருப்பதியின் கூட்டாளி சவுந்தரை, ‘அப்பள ராஜாவின் கூட்டாளி பாம்பு நாகராஜா உள்ளிட்டோர் வெட்டினர்.
இதில் சவுந்தர் உயிர் தப்பினார். இதற்கிடையே ‘அப்பள ராஜா கொலை வழக்கு ஒன்றில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுந்தரை வெட்டியதற்காக பாம்பு நாகராஜாவை கொலை செய்ய ‘கவாத்து திருப்பதியின் ஆட்கள் திட்டமிட்டனர். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த பாம்பு நாகராஜா, தனது சகோதரர் கருப்பு ராஜாவுடன் கோவைக்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையே, வேலூர் சிறையில் உள்ள அப்பள ராஜா, கவாத்து திருப்பதி உங்களை கொல்லும் முன்பு அவர்களை கொன்றுவிடுமாறு பாம்பு நாகராஜாவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் சகோதரர்கள் இருவரும் நேற்று மதுரைக்கு வந்தனர். ஏற்கனவே இருவரையும் கொலை செய்ய திட்டமிருந்த கவாத்து திருப்பதி தரப்பினருக்கு இது குறித்த தகவல் தெரிய வந்தது.
இதையடுத்து, கவாத்து திருப்பதி, அவரது சகோதரர் குண்டுமணி, சவுந்தர் உள்ளிட்டோர் நெல்லையை சேர்ந்த கூலிப்படையின் உதவியுடன், சகோதரர்கள் இருவரையும் வீடு புகுந்து வெட்டிகொலை செய்தனர். இதில் அவர்களுடன் இருந்த கார்த்திக்கும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திருப்பதி, அவரது சகோதரர் குண்டுமணி, சவுந்தர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்லை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குற்றவாளிகளை தேடி விரைந்துள்ள தனிப்படை மதுரையிலும் அவர்களை வலைவீசி தேடி வருகிறது.
விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே குற்றவாளிகள் கோர்ட்டில் சரணடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக பிரமுகர் கொலை
மற்றொரு சம்பவத்தில், மதுரை புதூரைச் சேர்ந்தவர் வேலு. 45-வது திமுக வட்டச் செயலாளர். இவரது மகன் முத்துப்பாண்டி (31). 1-ம் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் புதூர் ஐடிஐ பஸ் நிறுத்தத்திலுள்ள பெட்டிக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஒரு கும்பல் முத்துப்பாண்டியை சரமாரி யாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
இவரது முதல் மனைவி பூரணப்பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கு முத்துப்பாண்டி தான் காரணம் என நினைத்து அவரது உறவினர்கள் கொலை செய்தி ருக்கலாம் எனத் தெரிய வந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தல் அமைப்பாளர் கொலை
மதுரை தல்லாகுளம் கண்மாய் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா(32). பந்தல் அமைக் கும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவருக்காக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஆசாரி தெருவிலுள்ள கருணாநிதியின் வீட்டருகே கருப்பையா, அவரு டன் சேர்ந்து தொழில் செய்து வரும் கவிக்குமார், ராமகிருஷ் ணன் ஆகியோர் பேசிக் கொண்டி ருந்தனர்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அsடைந்த ராம கிருஷ்ணன், கவிக்குமாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கி டையே, இவ்வழக்கு தொடர்பாக ரமேஷ், அய்யாவு ரமேஷ், சுரேஷ் உள்பட 6 பேர் மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மதுரையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று பகல் 2 மணி வரை 16 மணி நேரத்துக் குள் 5 கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்ச மடைந்துள்ளனர்