என்னுடைய குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதனை என்னிடம் சிறு சிறு குழுக்களாக வந்து தெரிவித்துள்ளார்கள்.
எனவே தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு எனக்கான ஆசன ஒதுக்கீட்டை வழங்கு மாயின், பொதுத் தேர்தலில் களமிறங்க நான் தயா ராக இருக்கின்றேன். எவருக்கும் தேர்தலில் போட் டியிடுகின்ற விருப்பம் இருக்கலாம்.
ஆனால் மக்க ளின் ஆதரவு இருந்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனக்கு தேர்தலில் போட்டியிடும் விருப்பம் குறைவாக இருந்தாலும். மக்களின் ஆதரவு அதிகமாகவே காணப்படுகின்றது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ்மக்கள் என்னை வலியுறுத்துகின்றார்கள். இதனால் நான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
அவர் வழங்கிய நேர்காணல் முழுமையாக கீழே தரப்படுகிறது.
கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரை அண்மையில் நீங்கள் சந்தித்திருந்தீர்கள். இந்தச் சந்திப்புத் தொடர்பில் கூறுங்கள்?
பதில்: ஐ.நா. வின் புதிய மனித உரிமை ஆணை யாளரை சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. ஆனால், இந்தச் சந்திப்பு நீண்ட நேர சந்திப்பாக அமையவில்லை. இருந்தும் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இந்தச் சந்திப் பின் மூலம் எனக்குக் கிடைத்தது.
ஜெனீவா மனித உரிமை அமர்வுகளின் போது நான் வழமையாக அங்கு செல்வேன். அவ்வாறு சென்றிருந்தபோதே எனக்கு புதிய மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
தொண்டு நிறுவனங் கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை சந்தித்துக் கலந்துரையாடியபோது, மனித உரிமை ஆணையாளர் என்னையும் சந்தித்தார்.
அவரிடம் நான் யார் என்பதை அறிமுகப்படுத்தியிருந்தேன். எங்களுடைய மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே, எதிர்வரும் காலங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு நான் முயற்சிப்பேன்.
கேள்வி: வடமாகாண சபை நிறுவப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேலாகின்றது. அதிகப்படியான வாக்குகளை வழங்கி உங்களைத் தெரிவு செய்த மக்களுக்காக நீங்கள் இதுவரை எவ்வா றான பணிகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில்: எமது மனச்சாட்சியின்படி கூறுவதாயின் இதுவரை பெரிதாக எதுவும் மக்களுக்காகச் செய்ய வில்லை என்றே கூறவேண்டும். ஆனால் நான் எனது தேர்தல் பிரசாரங்களின்போது, வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப செயற்பட்டு வருகின்றேன்.
அதாவது, சரணடைந்த மற்றும் காணாமற்போன உறவுகளை மீட்பது தொடர்பாகவும் அரசியல் கைதிக ளின் விடுதலை தொடர்பாகவும் போராடி வருகின் றேன். ஜெனீவாவிற்குச் சென்றபோதும் இந்த விட யம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்.
அத்துடன் என்னைச் சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதி கள் அனைவரிடமும் இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றேன். நான் எனது தேர்தல் பிரசாரங்களின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றேன்.
இதைவிடுத்து மாற்று வழிகள் எதனையும் நான் பின்பற்றவில்லை. அந்த வகையில் நான் சொன்னதைச் செய்கின்றேன் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
கேள்வி: வேறு மாகாணங்களில் மாகாண சபையி னால் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வட மாகாண சபையினால் எவ்வாறான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன?
பதில்: வட மாகாண சபையில் ஐந்து அமைச்சுக் கள் காணப்படுகின்றன. இன்றுவரை வெளிப்படையாக பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டோ அல்லது வேறு வழிகளிலோ எந்தவொரு வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இதற்குக் காரணம், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளமையினால் எம்மால் மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கமுடியாத சூழ்நிலை நிலவுகின்றது.
ஓர் அலுவலகப் பணியாளரை நியமிப்பதற்குக் கூட எமக்கும் எமது அமைச்சுகளுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனால்தான் எம்மால் எந்தவொரு வேலை வாய்ப்பையும் வழங்க முடியவில்லை.
ஏனைய மாகாணங்களைப் பொறுத்தவரை ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஒரே கட்சி, ஒரே இனம் மற்றும் மொழி சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் தமது பணிகளை ஆற்றி வருகின்றனர்.
ஆனால் எங்களைப் பொறுத்தவரை அவ்வாறான நிலைமை இல்லை. இனம், மொழி போன்றவற்றால் நாங்கள் வேறுபட்டு இருப்பதால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
வடமாகாண சபையைப் பொறுத்தவரை, அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநரின் கைகளிலே இருக்கின்றன. அரசாங்கப் பிரதிநிதியான ஆளுநரின் கைகளில் அதிகாரங்கள் இருப்பதால், எம்மால் மக்களுக்கான எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையோ அல்லது வேலைவாய்ப்புக்களையோ வழங்க முடியவில்லை.
ஆனால் மாகாண அமைச்சர்கள் தற்துணிவின் பேரில் நியமனங்களை வழங்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆனால் இந்த விடயம் தொடர்பில் என்னால் விவாதிக்க முடியாது. ஏனெனில் நான் ஓர் சாதாரண மாகாண சபை உறுப்பினர். அவ்வாறிருந்துகொண்டு அமைச்சர்களை விமர்சிக்க முடியாது என்ற நிலைமை ஏற்படும்.
கேள்வி: ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா?
பதில்: எனக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் தொடர்புள்ளது. அங்குள்ள மாகாண சபை உறுப்பினர்களுக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர்.
கடந்த தேர்தல் பணிகளின்போது அவர்கள் வடமாகாணத்திற்கு வந்தபோது, அவர்களுடன் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.
அதேபோல் எமக்கான வாகன வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இரண்டரை வருடங்களுக்கு பின்னர் தான் வாகன வசதிகள் ஏற்படுத்தித் தருவதாக கூறியுள்ளனர்.
வடமாகாண சபையைப் பொறுத்தவரை அமைச்சர்களுக்கும், சபாநாயகருக்கும், உதவிச் சபாநாயகருக்கும் வாகன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
அதிகமாக அச்சுறுத்தப்படும் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையிலும், எனக்கு வாகன வசதியோ, பாதுகாப்போ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இவ்வாற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்தான் நான் எனது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றேன்.
கேள்வி: அண்மைக்காலமாக வடமாகாணத்தில் பெண்கள் மீதான வன்முறைகளும், சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளன. ஓர் பெண் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில், இவற்றைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில்: பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பிலான பொறுப்பு எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளமையினை ஊடகங்கள் வாயிலாக என்னால் அறிய முடிகின்றது. ஆனால் இந்தச் செயற்பாடுகள் வட மாகாண சபையில் எந்த அமைச்சுக்குக் கீழ் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இந்தக் கடமைகளை வடமாகாண சபை என்னிடம் எழுத்துமூலமாக ஒப்படைக்கவில்லை. எழுத்துமூலம் ஒப்டைக்கப்படாத ஓர் விடயத்தில் நான் எவ்வாறு தலையிட முடியும். ஆனால், நான் ஓர் சமூக சேவகி என்ற வகையிலும், மக்களின் நலன் சார்ந்த வகையிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கின்றோம்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைத் திரட்டி உரிய இடங்களில் ஒப்படைத்து வருகின்றோம். சிறுவர் நன்னடத்தைப் பிரிவு எமது இந்த முயற்சிகளுக்கு உதவி புரிகின்றது.
அத்துடன் பொலிஸாரும் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை இவ்வாறான விடயங்களுக்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே, இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான அதிகாரத்தை எனக்கு வழங்கினால், நான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
தற்போதுள்ள நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விபரங்களைச் சேகரித்து உரிய இடங்களுக்கு அனுப்பி வருகின்றேன். இதனை விடுத்து மேலதிகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எனக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.
கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
பதில்: என்னுடைய குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதனை என்னிடம் சிறு சிறு குழுக்களாக வந்து தெரிவித்துள்ளார்கள்.
எனவே எங்களுடைய கட்சி எனக்கான ஆசன ஒதுக்கீட்டை வழங்குமாயின், பொதுத் தேர்தலில் களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன். எவருக்கும் தேர்தலில் போட்டியிடுகின்ற விருப்பம் இருக்கலாம்.
ஆனால் மக்களின் ஆதரவு இருந்தால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். எனக்கு தேர்தலில் போட்டியிடும் விருப்பம் குறைவாக இருந்தாலும். மக்களின் ஆதரவு அதிகமாகவே காணப்படுகின்றது. பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ்மக்கள் என்னை வலியுறுத்துகின்றார்கள். இதனால் நான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றேன்.
கேள்வி: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அழிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அழிப்பது தொடர்பில் நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
பதில்: பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரே விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்கக்கூடாது என்று தெரிவித்தள்ளார். எனவே மக்கள் சாட்சியமளிப்பதில் அச்சம் கொண்டுள்ளனர்.
ஆனால் நாங்கள் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி பாதிப்புக்கள் தொடர்பாக அறிந்தவர்கள் கூட இந்த விசாரணைக்குழுவுக்கு சாட்சியம் அளிக்க முடியும். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக சாட்சியமளிக்கக் கூடியவர்கள் நிச்சயமாக தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க வேண்டும்.
நேர்காணல்: எஸ்.கணேசன்
படப்பிடிப்பு: எம்.எஸ்.சலீம்