நாம் குடிக்கும் காபியில் பால், சர்க்கரை, மற்றும் காபித்தூள் போடுவார்கள் என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் கனடாவில் உள்ள McDonald’s coffee ஷாப் ஒன்றில் காபியில் செத்த சுண்டெலி ஒன்றை போட்டு கொடுத்துள்ளனர்.
இதனால் அந்த காபியை பருகியவர் அதிர்ச்சி அடைந்து புகார் கொடுத்துள்ளார்.
கனடாவில் உள்ள New Brunswick என்ற மாகாணத்தை சேர்ந்த Fredericton என்ற நகரில் McDonald’s coffee ஒன்று உள்ளது. இந்த காபி ஷாப்பில் நேற்று Ron Morais என்பவர் பிளாக் காபி குடிக்க வந்தார்.
ஓட்டல் பணியாளர் சுடச்சுட கொண்டு வந்த காபியை குடித்து முடித்தவுடன் காபி கப்பில் உள்ளே அவர் பார்த்தபோது திடுக்கிட்டார். கப்பின் உள்ளே செத்துக்கிடந்த சுண்டெலி ஒன்று இருந்தது.ல
இதுகுறித்து Ron Morais அவர்கள் McDonald’s coffee ஷாப் நிர்வாகத்தில் புகார் செய்தார். McDonald’s coffee நிர்வாகம் அவருடைய புகார் கண்டு அதிர்ச்சியடைந்தது. உடனடியாக இந்த தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை செய்ய தனது ஊழியர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டது.
Ron Morais அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சோதனை செய்யவும், அவருடைய உடல்நிலைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த சிகிச்சைக்கு தேவைப்படும் செலவை ஏற்றுக்கொள்ளவும் சம்மதித்தது.
மேலும் Ron Morais அவர்களிடம் McDonald’s coffee நிர்வாகம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.