யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தைப் பேற்றிற்காக சென்ற கா்ப்பிணிப் பெண் ஒருவரை கடுமையான முறையில் ஏசி அவமானப்படுத்தியுள்ளார் தாதி ஒருவா்.
கடந்த வாரம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை பெறச் சென்ற கா்ப்பிணி அங்கு பிரசவ வேதனையால் கத்திக் கொண்டிருந்த போது அங்கு நின்ற மருத்துவத் தாதி அப் பெண்ணை கடுமையான முறையிலும் கேவலமாகவும் ஏசியுள்ளார்.
இவா் ஏசிய போது அங்கு நின்ற ஏனைய தாதியா்களும் சிரி்த்ததாகத் தெரியவருகின்றது.
“மனுசனோட படுக்கும் போது இப்படியோ கத்தினி” எனத் தெரிவித்து கா்ப்பிணியி்ன் கன்னத்தில் அடிக்க முற்பட்டுள்ளார் குறித்த தாதி.
கா்ப்பிணியின் கணவா் அரச உத்தியோகத்தில் இருப்பதாகவும் இதனை அறிந்த தாதி “ஏன்டி இங்க வந்தனி.. பிறவேற் கொஸ்பிட்டலில் போய் பெத்திருக்கலாமே? உன்ர மனுசனையும் பக்கத்தில வைச்சுக் கொண்டு இருந்திருக்கலாம் ” எனவும் தெரிவித்துள்ளதாக கா்ப்பிணியின் கணவா் கவலை தெரிவித்துள்ளார்.
தனக்கு இது முதல் குழந்தை என்பதால் பயத்தின் காரணமாகவே தான் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் ஆனால் தனது மனைவியை தனியார் சிகிச்சை நிலையத்திலேயே மாதந்தோறும் குறித்த ஒரு மகப்பேற்று நிபுணரிம் காட்டியதாகவும் கணவா் தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுகள் கடும் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் மகப் பேற்றுக்கு வரும் அரச ஊழியா்களின் மனைவிகளை தாதியா்களே பிறவேற் கொஸ்பிட்டலில் பெறலாமே என கூறுவதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மகப்பேற்று பிரிவில் கடமையாற்றும் வைத்தியா்களே தனியார் வைத்தியசாலைகளிலும் பணியாற்றுவதால் வருமானத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் கா்ப்பிணிகளை தொல்லைப் படுத்த முயற்சிப்பதாக தெரியவருகின்றது.
கோவிலுக்கு சென்று திரும்பிய யுவதியை அங்க சேட்டை செய்த காவாலி பொது மக்களால் பிடிக்கப்பட்டார்
28-10-2014
நல்லூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த யுவதியிடம் சில்மிசம் செய்த நபா் அப்பகுதியால் சென்ற இளைஞா்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை கந்நதசஸ்டி விரதம் அனுஸ்டித்து நல்லூருக்குச் சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி, செம்மணி நாயன்மார்கட்டு வீதிப் பகுதியில் வைத்து 18 வயதான ஒருவனால் அங்கசேட்டைக்கு உள்ளாகியுள்ளார்.
யுவதிக்குப் பின்னால் சைக்கிளில் சென்று யுவதியை அங்கசேட்டை செய்த போது யுவதி சைக்கிளை மதிலுடன் மோதியதாகவும் அப்போதும் அந் நபா் யுவதியைக் கட்டிப் பிடித்து கைகளால் சில்மிசத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றது.
இச் சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற யுவதி அலறத் தொடங்கவே தெருவால் வந்து கொண்டிருந்த சிலா் குறித்த நபரைப் பிடித்து கட்டி வைத்து தாக்கியுள்ளனா்.
மேற்படி 18 வயதான நபா் கடும் மது போதையில் இருந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந் நபா் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட போது குறித்த நபருக்கு ஆதரவாக அங்கு சிலா் வந்து வாக்குவாதப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதன்போது குறித்த நபருக்கு ஆதரவாக வாக்குவாதப்பட்ட இருவா் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பெண்ணுடன் அங்கசேட்டையில் ஈடுபட்ட நபருக்கு தாக்குதலின் காரணமாக முகத்தில் இருந்து பெருமளவு இரத்தம் வெளியேறவே அவனைத் தாக்கியவா்கள் அங்கிருந்து மாயமானதாகத் தெரியவருகின்றது.
இதன் பின்னா் அவனை முச்சக்கர வண்டியில் ஏற்றிய சிலா் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் இச் சம்பவம் தொடா்பாக யுவதி தனது உறவினா்களுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி அவா்களை அங்கு வரவழைத்து பொலிசாரிடம் முறையிடச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.