news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்து விபத்து - 2 பிள்ளைகள் பலி

கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.கற்பிட்டி களப்பின் கொடேபிட்டிய தீவிற்கு அருகில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையை எடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் குறித்த தம்பதியினரும் நேற்று மதியம் படகு ஒன்றில் சென்றுள்ளனர். இதன்போது அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக ...

முகத்தில் தடிப்பு, கொப்புளம்.. ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சு? நடிகையின் அதிரடி முடிவு!

சோகமான முடிவு ஒன்றை நடிகை ஸ்ருதி ஹாசன் எடுத்துள்ளார். கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அஸ்லான் என்ற பூனைக்குட்டியை தத்தெடுத்த மூன்று மாதங்களில் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் அஸ்லானின் உரோமம், உமிழ்நீரால் முகத்தில் கடுமையான ஒவ்வாமை, கொப்புளம், தடிப்பு ஏற்பட்டதால் வேலை, மனநிலை பாதிக்கப்பட்டது. பல சிகிச்சைகள் பலனளிக்காததால், மனம் நொந்தபடி அஸ்லானை முந்தைய உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏழாம் அறிவு படத்தின் மூலம் ந...

கிளிநொச்சி கொடூர வீதி விபத்தில் லாரியின் உதவியாளர் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியின் 155வது மைல்கல் பகுதிக்கு அருகில் இன்று (12.08.2026) அதிகாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் லாரியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் ரத்து - கிளம்பிய விவாதம்

போர்ட்டர் ஏர்லைன்ஸ் விமானம் ஆகஸ்ட் 6ஆம் தேதி விக்டோரியாவிலிருந்து டொராண்டோ செல்ல திட்டமிடப்பட்டிருந்ததுகனடாவில் ஒரு குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டது.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, விமானப் பயணங்களில் குழந்தைகளின் நடத்தை, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.போர்டர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானம் ஆகஸ்ட் 6ஆம் தேதி விக்டோரியாவிலிருந்து டொரோன்டோவுக்கு புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் பின்னர் அது மீண்டும் முனையத்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம் ; விழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது ஆலய வெளிவீதி

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. ம...

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மகோற்சவத் தேர்த் திருவிழா - வீடியோ

 வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2026 ஓகஸ்ட் 11) பக்திப் பெருக்குடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.கடந்த ஜூலை 19 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமான இக் கோவில் மகோற்சவப் பெருவிழாக்கள், தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழாவான வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்த் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்...

ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சி: ஒரு மீள் பார்வை -பகுதி – 3

ஜே.வி.பி. 1971 ஏப்ரலில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நேரத்தில் இருந்த அரசியல் சூழ்நிலையைத் தெளிவாக விளங்கிக்கொண்டால்தான், அவர்களது ஆயுதக் கிளர்ச்சி ஒரு திட்டமிட்ட எதிர்ப்புரட்சி நடவடிக்கை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.1970 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியனவும் இணைந்த ‘மக்கள் முன்னணி’ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது.இதில் ஒரு விசேடம் என்னவென்...

14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 9 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,408,620 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை 65,202 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பய...

வெளிநாட்டு ஆசைகாட்டி கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக்கோடி ரூபா அபேஸ்!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே கடந்த சில வாரங்களாக இத்தகைய மோசடிகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக 10 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்...

இரான் அச்சுறுத்தல்: டிரம்ப் உணவு வாகனத்தில் மறைந்து ரகசியமாக விமானம் மாறினாரா?

கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் இருந்து புறப்பட்டபோது, சாத்தியமான இரான் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிப் பயணித்ததாக அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.அந்தச் செய்தியின்படி, அமெரிக்க அதிபரான டிரம்ப் தொலைக்காட்சி கேமராக்கள் முன்னிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார்.ஆனால் பின்னர், உணவு விநியோக வாகனத்தின் உதவியுடன் அவர் வேறு ஒரு ராணுவ விமானத்துக்கு மாற்றப்பட்டார். விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்கள...

அடையாளம் மாறும் சிவாஜியின் 'அன்னை இல்லம்' - இடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்!

நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் இடிக்கப்பட்டு அபார்ட்மென்ட் ஆவது தொடர்பான செய்திநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.சென்னையில் 'அன்னை இல்லம்' என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது, சென்னை தி.நகர் போக் சாலையில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடுதான். சிவாஜி கடைசி வரை வாழ்ந்த அந்த வீட்டில்தான் இன்றும் அவருடைய மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர் கூட...

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்தும், ஒரு ரூபாய் நாணயமும் மீட்பு

செம்மணி புதைகுழி அகழ்வின் போது, என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 103 ஆவது நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (11) முன்னெடுப்பட்டன. முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 103 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 539 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 524  என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அ...

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல் அனுமதி அளிப்பதற்கு முடிவு

யுத்தத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைகள் ஊடாகவும் மற்றும் முறையான கடவுச்சீட்டைப்; பயன்படுத்தாமல், நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் தமது இலங்கையர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளவர்கள், சுயமாக எமது நாட்டுக்கு மீண்டும் திரும்பும்போது, அவர்களுக்கு குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்க...

கிறிஸ்துவர்கள் யூதர்களை ஏற்றாலும் ஏற்பார்களே தவிர, முஸ்லிம்களை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். (நிலமெல்லாம் ரத்தம் - 63)

பாலஸ்தீன் போராளிகளுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய பிரச்னை, ஆயுதங்கள். அதிநவீன ஆயுதங்களுடன் அவர்களுக்குப் பரிச்சயம் கிடையாது. கொடுத்தாலும் உபயோகிக்கத் தெரியாது. நாட்டுத் துப்பாக்கிகளும் கையெறிகுண்டுகளுமே அவர்களுக்குப் போதுமானவை. ஆனால் அவை கிடைப்பதில்தான் அதிக சிக்கல்கள் இருந்தன.மற்ற விஷயங்களில் எப்படியோ. ஆயுதப் பதுக்கல், கடத்தல், தயாரித்தல் நடவடிக்கைகளைக் கண்டறிந்து ஒழிப்பதில் அப்போது பாலஸ்தீனில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம் மிகத் தீவிரமாக இருந்தது. போராளிகளின...

உலகின் பாதுகாப்பான 5 நாடுகளில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு பார்வை

இரண்டாம் உலகப் போருக்கு பின் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது உலகில் அதிகமான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், ஐஸ்லாந்து, நியூசிலாந்து மற்றும் பிற சில நாடுகளின் குடியிருப்பவர்கள் அவர்களின் நாடுகள் ஏன் இவ்வளவு அமைதியானவை என்பதைக் கூறுகின்றனர்.சமீபத்திய உலக அமைதி குறியீட்டின்படி, உலகம் கடந்த ஆண்டைவிட குறைவான அமைதியைக் கொண்டதாக மாறியுள்ளது. மொத்தத்தில், 99 நாடுகளில் அமைதித் தன்மை குறைந்துள்ளது. இதன் மூலம், உலகளாவிய அமைதி தொடர்ந்து 12-ஆவது ஆண்டாக சரிவடைந்துள்ளது.எனினும், மோசமடைந்த...

வட, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆயிரம் மில்லியன் டொலர் நிதியுதவி

வடக்கு, கிழக்கில் ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆயிரம் மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,0...

லக்கலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமனார் கொலை : மருமகன் தப்பி ஓட்டம்!

மாத்தளை- லக்கலை, தொரபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 78 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த நபரை பொலிஸ் அதிகாரிகள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் மா ஓயா பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரால் அடையாளம் கண்டுள்ளனர்.உயிரிழந்தவருக்கும் இவருடைய மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றியதில், மருமகன் மாமனாரை கூரிய ஆயுதத்தால் ...

மொனராகலையில் பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று, புத்தல – மஹகொடய பகுதியில் இன்று (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணியளவில்  வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.பேருந்து வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் பேருந்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து இடம்பெற்ற விதம் தொடர்பான ...

நோர்வூட்டில் ரூ1.62 கோடி அஸ்வெசும நிதி மோசடி ; இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய இருவரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நீதவான் நீதிபதி பீட்டர் பால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பிரிவின் பொறுப்பாளராக இருந்த, ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர்.இரு சந்தேக நபர்களைக் கைது செய்து, அவர்...

வவுனியாவில நண்பனின் 11 வயது மகள் பாலியல் துஷ்பிரயோகம் சந்தேகநபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

நண்பனின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பகுதியில் தாயினால் கைவிடப்பட்டு தந்தையின் பராமரிப்பில் இருந்த 11 வயதுடைய சிறுமியை, தந்தையின் நண்பரான 36 வயதுடைய நபரொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் அறிக்கை த...

அமெரிக்காவில் இந்திய காதலன் கொலை: 19 வயது ஜூலிசா ரூபி சலார் படுகொலை வழக்கில் வருண் ஜெர்மனியில் கைது

அமெரிக்காவில் 19 வயது கல்லூரி மாணவி ஜூலிசா ரூபி சலார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது இந்தியக் காதலனான வருண் பட்சிகாரி (20) என்பவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள டக்சன் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில், ஜூலிசா சலார் பலத்த காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.மகளைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட சோதனையிலேயே இது கொடூரமான கொலை என்பது உறுதியானது.கொலையாளி வருண், ஜூலிசா...

‘அருகே அருகே அவளும் வந்தாலே’ - ‘ஐ எம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!"

:"ஆர்டிஎக்ஸ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘ஐ எம் கேம்’. இவர்களோடு மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோரும் நடித்துள்ளனர். அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒருவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படத்தை துல்கர் சல்மான், ஜாம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஜேக்ஸ் பெஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.20ம்...

’கஞ்சிபானி இம்ரானின்’ சகாக்கள் கட்டுநாயக்கவுக்கு அழைத்து வரப்பட்டனர்

இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவரின் நிதிச் செயல்பாடுகளைக் கவனித்து வந்த 'ரத்மலானே சைமா' என அழைக்கப்படும் தொடிவிலகே தனுஷ்க கௌசல்ய உட்பட மூவர் மலேசியாவில் வச்சு கைது செய்யப்பட்டுள்ளனர்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினால் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இவர்கள்இ ஓகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.'ரத்மலானே சைமா' (41 வயது)இ ரத்மலானை...

மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்டி வீட்டிற்குச் சென்ற ஊழியர்களால் வெடித்தது சர்ச்சை

மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கதவுகள் பூட்டப்பட்டு சென்றதால் சுமார் அரை மணி நேரம் சிக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நகர சபை உறுப்பினர் ராசிகா குணசிங்க கோரிக்கை விடுத்தார். கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற மகரகம நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார். தேசிய மக்கள் சக்தியின் சமன் சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந்த நகர சபை ...