news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

கிளிநொச்சியில் 500 இராணுவதினரை சுற்றி வழைத்த புலிகள்! (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.:இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்)-பகுதி -7)
21 Mar, 2026

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றார் முதலமைச்சர் விஜய்

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் உற்சாகமாகத் தொடங்கியது. முதலாவதாக, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் பிரபு உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். தமிழக வரலாற்றில் இளவயது முதலமைச்சர்கள் பட்டியலில் விஜய் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...

பன்னிபிட்டிய இளைஞர் பரிதாப பலி!

கெக்கிராவ, கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள குளத்தில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று குறித்த இளைஞர் மேலும் ஐந்து பேருடன் இணைந்து கிரிமெட்டியாவ குளத்தில் படகு சவாரியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. படகு எதிர்பாராத விதமாகக் கவிழ்ந்ததில், அதில் இருந்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட போதிலும், 28...

"தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்கவும்": பிரதமர் மோடி அவசர வேண்டுகோள்!

மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, இந்திய மக்கள் தங்கம் மற்றும் பெற்றோலியப் பொருட்களைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நேற்று (மே 10) தெலுங்கானாவில் நடைபெற்ற வளர்ச்சித் திட்ட விழாவில் உரையாற்றிய அவர், இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களுக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அடுத்த ஓராண்டு...

மும்பை இந்தியன்ஸை 'அன்-பாலோ' செய்தாரா ஹர்திக்?

2026 ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 8 தோல்விகளைச் சந்தித்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சமூக வலைதள நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 10 அன்று பெங்களூரு அணியிடம் தோற்ற பிறகு, ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை 'அன்-பாலோ' செய்ததாக ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட்டுகளை வைரலாக்கினர். அவரது பின்தொடர்பவர் எண்ணிக்கை 151-லிருந்து 150 ஆகக் குறைந்ததும், பின்னர் சில நிமிடங்களிலேயே மீண்டும் 151 ஆக உய...

எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்கவுள்ள மகிந்த ; 8ஆம் திகதி மர்மமாக மரணித்த கபில!

சி.சி.என்  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கபில சந்திரசேன,   மே 8 ஆம் திகதி, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டமை நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஊழல் வழக்கு ஒன்று தொடர்பாக அவரிடம் சாட்சியங்கள் பெற இருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான விசாரணைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவே   கூறவேண்டியுள்ளது. கபில சந்திரசேன உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டாலும் மேற்பட...

4000 கோடி பட்ஜெட் 'ராமாயணா': சீதையாக நடிக்கும் சாய் பல்லவி!

இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' (பாகம் 1 & 2) திரைப்படத்தில், ரன்பிர் கபூருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக சுமார் ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் இந்தத் திரைப்படம் தயாராகி வருவதாகத் தயாரிப்புத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது சாய் பல்லவியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதற்...

'காஞ்சனா 4' மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் பேய் பட வரிசையில் மாபெரும் வெற்றி பெற்ற 'காஞ்சனா' சீரிஸின் 4-வது பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக இரண்டாம் பாகங்கள் தோல்வியடையும் என்ற பிம்பத்தை உடைத்து, ஒவ்வொரு பாகத்திலும் வசூல் சாதனை படைத்து வரும் இந்தத் தொடரின் அடுத்த படைப்பை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து முன்னணி நடிகை பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் கவர்ச்சிப் புயல் நோரா ஃபதேகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்ப...

சமூக ஊடகங்களில் பரவி வந்த இளம் பெண்களின் காணொளி - அதிரடியாக கைது செய்த பொலிஸார்

மோட்டார் சைக்கிள் ஒன்றில் தலைக்கவசம் இன்றி, ஆபத்தான முறையில் மூவர் பயணிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, அது தொடர்பில் விசாரணை நடத்திய புத்தள பொலிஸார் நான்கு பெண்களைக் கைது செய்துள்ளனர்.வீதியில் மூன்று இளம் பெண்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த காணொளி பொதுமக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.வைரலான காணொளி காட்சிகளைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பெண...

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!

சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (மே 11) அதிரடியாக அதிகரித்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,700 - 4,730 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், வெள்ளியின் விலையும் அவுன்ஸ் ஒன்றுக்கு 80 - 90 டொலராக அதிகரித்துள்ளது. இந்த சர்வதேச விலை ஏற்றம் மற்றும் அமெரிக்க டொலரின் வலுவான மதிப்பு காரணமாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இன்றைய நி...

கட்டுநாயக்க நோக்கிச் சென்ற வான் மண்முனையில் தீப்பற்றி எரிந்து நாசம்.

மட்டக்களப்பு - கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்று, நேற்று (மே 10) இரவு 7.00 மணியளவில் மண்முனை பகுதியில் வைத்து திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. வானில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தீப்பற்றிய உடனே வானிலிருந்த பயணிகள் அனைவரும் விரைவாக வெளியேறியதால், எவருக்கும் எவ்வித காயங்களும் அல்லது உயிர் பாதிப்புகளும் ஏற்படவில்லை என மாவட்ட க...

"சிறுமிக்காக நிபந்தனையின்றி நிற்பேன்": பிக்குவின் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் அமைச்சர் சரோஜா சாவித்திரி உறுதி!

அனுராதபுரம் தலைமை தேரரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி பெற்றுத் தருவதில் தான் நிபந்தனையின்றிச் செயற்படப் போவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தான் பொலிஸாருக்கோ அல்லது சந்தேகநபரான பிக்குவுக்கோ சார்பாகச் செயற்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ...

வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்': அதிபர் கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்

பியாங்யாங்: வட​கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடு​கள் மீது தானாகவே அணு ஆயுத தாக்​குதல் நடத்​தப்​படும் என்று அந்த நாடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இது வடகொரி​யா​வின் ‘டெட் ஹேண்ட்' என்​றழைக்​கப்​படு​கிறது.கடந்த 1980-களில் சோவி​யத் யூனியன் (ரஷ்​யா) ‘டெட் ஹேண்ட்' என்ற அணு ஆயுத கட்​டளை அமைப்பை உரு​வாக்​கியது. எதிரி நாடுகளின் அணு ஆயுத தாக்​குதலால் ரஷ்யா அழிந்​து, அதன் தலை​வர்​கள் உயி​ரிழந்​தால் ‘டெட் ஹேண்ட்' தானாக செயல்​பட்டு எதிரி நாடு​கள் மீது அணு ஆயுத தாக்​குதல்​களை நடத...

இலங்கையில் டிஜிட்டல் வாகனக் காப்புறுதி முறை அமல்: செல்லுபடியாகும் தன்மையை 1338 ஊடாகச் சரிபார்க்கலாம்!

இலங்கையில் மே மாதம் 1ஆம் திகதி முதல் காகித காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள "தேசிய காப்புறுதிச் சரிபார்ப்பு அமைப்பு" (NIVS) மூலம் காப்புறுதியின் உண்மையான நிலையை நுகர்வோர் மற்றும் அதிகாரிகள் எளிதில் அறிய முடியும். பொதுமக்கள் *1338# என்ற USSD குறியீடு அல்லது 1338 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலம் காப்புறுதி செல்லுபடியாக உள்ளதா என்பதை உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். வாகன இலக்கத்தை உள்ளிடும...

"சிஸ்டம் சேஞ்ச் எங்கே?" - தேசிய மக்கள் சக்தியைச் சாடும் நாமல் ராஜபக்ச!

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றியே தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதாக நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். குருநாகலை ஹிரியாலவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அமைப்பு மாற்றத்திற்காக (System Change) நேர்மையாகப் போராடிய இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் 9-ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை நினைவு கூர்ந்த அவர், தமது கட்சி உறுப்பினர்களின் வீடுகளை எரித்...

ஈரான் மீதான நடவடிக்கைகள் உலகத்துக்கு பயனுள்ளது ; இஸ்ரேலியத் தூதுவர் கூறுகிறார்

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கும், இலங்கையர்கள் உட்பட இலட்சக்கணக்கா உலக நாட்டவர்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்' என்று இலங்கை மற்றும் இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதுவர் ரூவன் அசார் தெரிவித்தார்.அண்மையில் கொழும்பு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் சமகால நிலைமைகள் சம்பந்தமாக வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார்.அவருடனான நேர்காணலின்போது, இஸ்ரேலிய அரசாங்கம் லெபனானில் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் ஈரான் போர்...

"ஈரான் உலக நாடுகளுடன் விளையாடுகிறது": அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரான் உலக நாடுகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலைப் சமர்ப்பித்த சில மணிநேரங்களிலேயே ட்ரம்ப் இந்த விமர்சனத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் அமெரிக்காவையும் ஒட்டுமொத்த உலகத்தையும் ஏமாற்றி வருவதாகவும், அவர்கள் இனி சிரிக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரித்துள்ளார். ஈரானின் புதிய முன்மொழிவை அமெரிக்கா முழும...

தமிழக 17-ஆவது சட்டப்பேரவை இன்று கூடுகிறது: புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு - நாளை சபாநாயகர் தேர்தல்!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 9.30 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்குகிறது. அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுத் தேர்வாகியுள்ள புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். தற்காலிகச் சபாநாயகராக (Pro-tem Speaker) நியமிக்கப்பட்டுள்ள கருப்பையா, புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். முன்னதாக, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் நேற்று (ம...

பலாங்கொடையில் மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: 27 வயது இளைஞர் பரிதாப பலி!

இரத்தினபுரி - பலாங்கொடை வீதியின் பத்கம்கொட சந்திக்கு அருகில் நேற்று (மே 10) இடம்பெற்ற வீதி விபத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடையிலிருந்து பெல்மடுல்ல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் உடனடியாகக் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார...

தெனியாயவில் மூளைக்காய்ச்சல் அச்சம்: 4 முக்கிய பாடசாலைகள் நாளை வரை மூடல் - மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

தெனியாய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நான்கு பிரதான பாடசாலைகளை மேலும் இரண்டு நாட்களுக்கு (இன்றும் நாளையும) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெனியாய வலய கல்விப் பணிப்பாளர் நிஷாக ஹெட்டிகொட தெரிவித்துள்ளார். இந்தப் பரவல் Meningitis எனப்படும் மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் எனச் சுகாதாரத் துறையினர் சந்தேகம் வெ...

இன்று முதல் மின்சாரக் கட்டண உயர்வு: 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்குப் பாதிப்பு - 95% மக்களுக்கு விலக்கு!

இலங்கையில் 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்ததைக் கருத்தில் கொண்டு, 8% முதல் 14.4% வரை கட்டணத்தை உயர்த்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. எவ்வாறாயினும், நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்க உடன்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் 95 ...

"திட்டமிட்ட தற்கொலையா?" - கபில சந்திரசேன மரணத்தில் புதிய திருப்பம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் சி.இ.ஓ கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எயார்பஸ் (Airbus) ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இவருக்கு எதிராக, பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறி கடந்த மே 7-ம் தேதி நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்தது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, அவர் தற்கொலைக்கு பயன்படுத்தி...

ன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை

இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் பாரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (28) அன்று நடைபெற்றது அதில்  கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறவில்லை என அமெரிக்க அஞ்சல்...

அமெரிக்காவுடன் 2-வது கட்ட பேச்சு நடத்த இரான் நிபந்தனை - பாகிஸ்தான் என்ன செய்கிறது?

இரான் போர் முடிவுக்கு வருவது தொடர்பாக விரைவில் ஏதேனும் நற்செய்தி வரக்கூடும் என்ற நம்பிக்கையை, திங்களன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சில கருத்துகள் ஏற்படுத்தின.ஆனால் இந்த நம்பிக்கை சில மணிநேரம் மட்டுமே நீடித்தது. அதன்பிறகு, அமெரிக்கா மற்றும் இரானிடமிருந்து வந்த தொடர் அறிக்கைகள், அமைதி இன்னும் வெகு தொலைவில் இருப்பதாகவே உணர்த்துகின்றன.அமெரிக்காவுடனான அடுத்த...

கால்வாயில் விழுந்த யானை மீட்பு: ஆவேசமடைந்து வாகனங்களை பந்தாடியது

மாதுரு ஓயா 'ZD' கால்வாயில் தவறி விழுந்த காட்டு யானை ஒன்றை மீட்கும் நடவடிக்கையின் போது, அந்த யானை வனவிலங்கு பாதுகாப்புத் துறையினரின் வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரலகங்வில – பிம்புரத்தாவ பகுதியிலிருந்து இன்று (17) அதிகாலை குறித்த யானை கால்வாய்க்குள் விழுந்துள்ளது. இது குறித்துத் தகவலறிந்த வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மடகம பகுதியில் வைத்து யானையைப் பாதுகாப்பாகக் கரைக்...