ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் அல்டிமேட் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை அனுஷ்கா.
இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய திரைப்படமான லிங்காவிலும் அனுஷ்காவையே கதாநாயகியாக தெரிவு செய்துள்ளனர்.
தமிழில் ஒரு படம்கூட வாய்ப்பு இல்லாததால் தனது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், சினிமாவில் உச்ச கட்டத்தில் இருக்கும் பெரிய ஹீரோக்களுடன் அடுத்தடுத்து நடிக்க வந்த வாய்ப்பால் திக்குணிக்காடி போய்விட்டாராம் அனுஷ்கா.
இவரது இந்த அசுர வளர்ச்சியைக் கண்டு இவருடைய சக நடிகைகள் கலங்கிப் போயுள்ளார்களாம்.
அனுஷ்காவின் தாய்மொழி கன்னடம். தமிழ் தெரிந்தாலும் சரளமாக பேச வராது. அதனால் அனுஷ்கா நடித்த தமிழ்ப் படங்களுக்கு டப்பிங் கலைஞர்கள் தான் இதுவரை குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், முதல்முறையாக அனுஷ்காவே சொந்தக் குரலில் டப்பிங் பேசவிருக்கிறாராம்.
அஜீத் – கௌதம் மேனன் திரைப்படத்தில் அனுஷ்கா நாயகி. சில தினங்கள் முன் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அனுஷ்காவுடன் இன்னொரு நடிகையும் நடிக்க உள்ளார். அவர் யார் என்பது இன்னும் முடிவாகாமலே உள்ளது.
இந்த திரைப்படத்தில் அனுஷ்கா சொந்தக் குரலில் டப்பிங் பேச உள்ளதாக படப்பிடிப்புக் குழு தெரிவித்துள்ளது. தமிழில் அவர் டப்பிங் பேசுவது இது முதல்முறை என்பதால் பயிற்சி எடுத்து வருவதாகவும் யுனிட்டில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.