பிரமிளாவின் கடையில் இருந்த ஐஸ்பெட்டி, பழங்கள் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பிரமிளா, ‘தான் அபராதம் கட்டத் தயாராக இருப்பதாகவும் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும்’ அவர்களிடத்தில் கெஞ்சியுள்ளார்.
பிரமிளாவின் வேண்டுகோளை அதிகாரிகள் ஏற்காமல் கடையில் இருந்த பொருள்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரமிளா தன் ஸ்கூட்டியில் அதிகாரிகள் சென்ற வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கினார். ஸ்கூட்டியில் இருந்து இறங்கிய அவரின் கையில் அரிவாள் இருந்ததைக் கண்டு. மாநகராட்சி ஊழியர்கள் பயத்தில் அலறினர்.
அதிகாரி பிரபாகர் கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருள்களைப் பிரமிளா மீட்டுச் சென்றார்.
அதிகாரிகள்’ தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம்’ என்று தப்பி ஓடிவிட்டனர். பின்னர், ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, விரார் போலீஸ் நிலையத்தில் பிரமிளா மீது பிரபாகர் புகார் அளித்தார். பிரமிளாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.