ஏமன் நாட்டில் உள்ள ஒரு அமெரிக்க உளவாளியை அல்கொய்தா தீவிரவாத இயக்கம் சுட்டுக்கொன்று கால்பந்தாட்ட மைதானத்தில் இறந்த உடலை கட்டி வைத்து மற்ற உளவாளிகளுக்கும் இதே போன்ற நிலைதான் எதிர்காலத்தில் வரும் என அதிர்ச்சி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை காரணமாக அமெரிக்கா மற்றும் ஏமன் நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஏமன் நாட்டில் உள்ள southeastern Hadhramout province என்ற பகுதியில் உள்ள Shahr என்ற நகரத்தை சேர்ந்த அமெரிக்க உளவாளி ஒருவர் சமீபத்தில் அல்கொய்தா இயக்கத்தினரால் பிடிபட்டார்.
அப்போது அவர் மைக்ரோசிப்ஸ் மூலம் அல்கொய்தாவின் மிலிட்டரி உள்ள இடங்களை பதிவு செய்து வைத்திருந்ததை கண்டுபிடித்த அல்கொய்தா இயக்கத்தினர் அவரை கொடுமையாக சித்திரவதை செய்து, அதன்பின்பு சுட்டுக்கொன்றனர்.
மரணம் அடைந்த அவரது உடலை ஏமன் நாட்டில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றின் கோல் போஸ்ட்டில் கயிற்றினால் தொங்கவிட்டு, மேலும் சில அமெரிக்க உளவாளிகளுக்கும் இதுபோன்ற நிலைமை எதிர்காலத்தில் வரும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த பகிரங்க எச்சரிக்கை காரணமாக ஏமன் மற்றும் அமெரிக்க அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.