முன்னாள் புலிகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது போல் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள், முதியவர்கள் கொலைசெய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் இராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கம் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தயா ரத்நாயக்க, இராயாங்க அமைச்சர் விஜயகலா இதற்கு முன்னரும் பொய்களையும் தேவையற்ற கட்டக்கதைகளையும் பரப்பி வந்தள்ளார்.
எனவே இராஜாங்க அமைச்சர் வியஜகலாவுக்கும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வுபோல் புனர்வாழ்வு வழங்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சூத்திரதாரிகளை காப்பாற்ற பலகோடிகளை வாங்கி தப்பவைத்தார் எனவும் தற்போது செய்திகள் வெளியாகியிருந்ததுடன் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினரால் அவர் பல மணிநேரம் விசாரைணக்கும் உட்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.