அம் மாகாணத்தின் புதிய கருக்கலைப்பு சட்டப்படி, கருவில் சிசுவின் இதயதுடிப்பு உணரப்பட்ட காலத்திற்கு பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதி கிடையாது. கருக்கலைப்பு செய்வதாக இருந்தால் அதற்கு முன்னரே செய்து கொள்ள வேண்டும் ` எனக் கூறப்படுகின்றது.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதயத்துடிப்பை உணர 6 வாரங்கள் ஆகலாம். இக் காலகட்டத்திற்குள் தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பதே பெரும்பாலான பெண்களுக்குத் தெரியவருவதில்லை.
அவ்வாறான நிலையில் இதுபோன்ற கடுமையான சட்ட நடைமுறை எங்களுக்கு ஒத்துவராது இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற குரல் பெண்களிடத்தில் எழுந்துள்ளது.
சர்ச்சைக்குள்ளான இச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பெண்கள் தரப்பில் சிலர் முறையிட்ட நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அரசின் முடிவில் தலையிட முடியாது என ஒதுங்கிக் கொண்டது.
இதன் பின்னர் தாங்களாகவே போராட்டத்தில் குதித்துள்ளனர் பெண்கள். இதனிடையே இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாடகியும், நடிகையுமான பெட்டே மிட்லர் (Bette Midler) டுவிட்டர் வாயிலாக வெளியிட்டுள்ள பதிவில், ”கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடாமல் செக்ஸ் (sex-strike) ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது பெண்களின் வாழ்க்கை, அவர்களின் உடலமப்பு பற்றியது. பெண்கள் இனப்பெருக்க முடிவுகளை எடுப்பதில் முழு சுதந்திரம் கிடைக்கப் பெறும்வரை இப்போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.