சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.கோவில்பட்டி. இக்கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் காது வளர்ப்பதை செகுட்டைய அய்யனாருக்கு செலுத்தும் நேர்த்திக்கடன் என்கின்றனர். செகுட்டைய அய்யனார் கோயிலில் கட்டடம் கட்டுவதில்லை. காது வெட்டி வளையம் போடுவதற்காகவே கிராமத்தில் ஆட்கள் இருந்தனர்.
தற்போது காது வெட்டி வளையம் போடுவதற்கு ஆட்கள் இல்லாததால் மருத்துவமனைகளில் வளையம் போட்டுக்கொள்கின்றனர்.
காது வளர்க்கவில்லை என்றால் சாமி குத்தம் ஏற்பட்டுவிடும் என்று இக்கிராம மக்கள் நம்புகிறார்கள். இது பற்றிய காணொளி.