ஆண்ட பரம்பரை இளவசர்களில் சார்லஸ் முதல் ஜார்ஜ் வரை பெயர்களை டான் டான் என்று சொல்லிவிடுவோம். ஒவ்வொரு விஷயத்துக்கும் நம் நாட்டையே நம்பி இருக்கும் பூடான் நாட்டைச் சேர்ந்த குட்டி இளவரசர் டெல்லி வந்துள்ளார்.
அண்டை நாடான பூடானுக்கும் நமக்கும் நெருங்கிய உறவு உண்டு. பொருளாதாரத்தில் இருந்து ராணுவ உதவி வரை, அத்தனை விஷயங்களுக்கும் இந்தியாவை நம்பி இருக்கும் நாடு பூடான்.
சமீபத்தில், பூடானின் டோக்லாம் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயன்றபோது, இந்தியாவும் ராணுவத்தை அங்கே நிறுத்துவதற்கு இந்த உறவுதான் காரணம்.
பூடான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் மற்றும் அவரது மனைவி கியால்ட்ஸ்யூன் ஜெட்சன் பேமா வாங்சுக் ஆகியோர், நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர்.
அரச தம்பதி, இளவரசர் ஜிக்மே நாம்கெல் வாங்சுக்கையும் அழைத்துவந்துள்ளனர். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்தனர்.
அப்போது, குட்டி இளவரசருக்கு பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார். பிஞ்சு விரல்களால் அவரும் பதிலுக்கு பிரதமருக்கு வணக்கம் தெரிவித்தார்.
பூடான் இளவரசருக்கு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட்ட கால்பந்து ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்தார்.