ஆர்யா முதன்முதலாக தயாரிப்பாளராகி தயாரித்த திரைப்படம் அமரகாவியம். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.
இந்த விழாவில் இந்த படத்திற்கு கொன்சமும் சம்மந்தம் இல்லாத இரண்டு ஹீரோயின்கள் வந்ததுதான் இந்த விழாவில் ஹைலைட் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
அந்த இரண்டு ஹீரோயின்கள் நயன்தாரா மற்றும் த்ரிஷா.
நயன்தாரா தான் நடித்த படத்தின் ஆடியோ விழாவுக்கே செல்லாதவர். அனாமிகா படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் விழாவுக்கு அவர் வரவில்லை என்பதால்தான் அவருக்கு தெலுங்கு திரைப்படவுலகம் நடிப்பதற்கு தடை விதித்தது.
தடை விதித்தாலும் பரவாயில்லை எந்த விழாவுக்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர் ஆர்யாவுக்காக இந்த விழாவில் கலந்துகொண்டதுதான் இந்த விழாவின் சிறப்பம்சம்.
அதுபோல் ஆர்யாவுக்காக இந்த விழாவுக்கு வந்திருந்த இன்னொரு நடிகை த்ரிஷா. இந்த விழாவில் ‘அமரகாவியம்’ படத்தின் முதல் சிடியை நயன்தாரா வெளியிட அதை த்ரிஷா பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவுக்கு நயன்தாரா மற்றும் த்ரிஷா கலந்துகொண்டதன் காரணம் என்று கேட்கப்பட்டபோது, ஆர்யாவின் நட்புக்காக வந்ததாக இருவரும் கூறினர்.
மேலும் த்ரிஷா இந்த விழாவில் பேசியபோது, “ஆர்யா படப்பிடிப்பு தளங்களில் ஹீரோயின்களை நன்றாக கவனிப்பார் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் என்னுடன் நடிக்கும்போது ஆர்யா என்னை கண்டுகொண்டதே இல்லை என்று கூறினார்.
நயன்தாரா கூறும்போது என்னை மட்டும் அவர் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்வார் என்று கூறுவதில் உண்மையில்லை. எல்லா ஹீரோயின்களையும் அவர் செட்டில் நன்றாக கவனித்துக்கொள்வார் என்று கூறினார்.