ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காணொளி வெளியாகியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 பொறியியல் மாணவர்கள் ஹிமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர்.
அவர்கள் கடந்த ஞாயிறு மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் நதியில் மாணவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.
மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கையில் லார்ஜி அணை திறந்துவிடப்பட்டதால், ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 24 மாணவ, மாணவியர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாணவ, மாணவியர் அடித்துச் செல்லப்பட்டபோது அவர்கள் கதறுவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. கரையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் தான் இந்த காணொளியை பதிவு செய்துள்ளனர்.
புகைப்படம்
மாணவர்கள் ஆற்றில் கிடந்த சிறு சிறு பாறைகள் மூலம் அந்த பெரிய பாறையை அடைந்து புகைப்படம் எடுத்தனர்
மாணவர்கள் ஆற்றில் கிடந்த சிறு சிறு பாறைகள் மூலம் அந்த பெரிய பாறையை அடைந்து புகைப்படம் எடுத்தனர்
லார்ஜி அணை
மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கையில் லார்ஜி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 24 மாணவ, மாணவியர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கையில் லார்ஜி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 24 மாணவ, மாணவியர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
வீடியோ
மாணவ, மாணவியர் ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நின்று புகைப்படம் எடுத்ததும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது அவர்கள் செய்வதறியாது திணறிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அமருஜலா டாட் காம் என்ற ஆன்லைன் இந்தி செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது.
மாணவ, மாணவியர் ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நின்று புகைப்படம் எடுத்ததும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது அவர்கள் செய்வதறியாது திணறிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அமருஜலா டாட் காம் என்ற ஆன்லைன் இந்தி செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது.
அலறல்
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாணவ, மாணவியர் அடித்துச் செல்லப்பட்டபோது அவர்கள் கதறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கரையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் தான் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாணவ, மாணவியர் அடித்துச் செல்லப்பட்டபோது அவர்கள் கதறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கரையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் தான் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
அமைதி
நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் 24 மாணவ, மாணவியரால் தப்பிக்க முடியாமல், இறுதியில் அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அமைதி நிலவுவது வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் 24 மாணவ, மாணவியரால் தப்பிக்க முடியாமல், இறுதியில் அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அமைதி நிலவுவது வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
வீடியோ மாணவ, மாணவியர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ இதோ…