துருக்கியிலுள்ள வீடொன்றின் இரண்டாவது மாடியின் ஜன்னலுக்கூடாக வீழ்ந்த 2 வயது குழந்தையொன்றை, வீதியிலிருந்தவாறு தாங்கிப் பிடித்த 17 வயதான ஓர் இளைஞர் பலாராலும் பாராட்டப்பட்டுள்ளார்.
பௌஸி ஸபாத் எனும் 17 வயது அல்ஜீரிய இளைஞரே இத்துணிச்சலான நடவடிக்கையில் ஈடுபட்டவராவார்.
இவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரின் ஃபதீஹ் எனும் பகுதியில் சென்றபோது, வீடொன்றின் 2 ஆவது மாடியின் திறந்த ஜன்னல அருகில் குழந்தையொன்று விளையாடுவதை அவதானித்தார்.
அக்குழந்தை ஜன்னலுக்கூடாக தவறி வீழ்ந்தபோது, பௌஸி ஸபாத் தனது கைகளால் தாங்கிப் பிடித்ததன் மூலம் அக்குழந்தை தரையில் விழாமல் காப்பாற்றப்பட்டது.
இக்காட்சிகள் கண்காணிப்புக் கெமராவிலும் பதிவாகியுள்ளன. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் இவ்வாம் வெளியிடப்பட்டவுடன் பெரும் எண்ணிக்கையானோர் பார்வையிட்டுள்ளனர்
வீடியோ: