கண்களில் உலவும்
இரகசியக் கனவுகள்
தயக்கத்தை தகர்க்கும்
இளமை எண்ணங்கள்
உரசும் இதழ்கள்
சிவக்கும் கன்னங்கள்
நன்றாக கேட்டிடும்
மௌனத்தின் மொழிகள்
மனம் சுமக்கும்
இனிய நினைவுகள்
உள்ளம் உரைக்கும்
அலைபாயும் ஆசைகள்
பனிவிழும் இரவுகள்
தொடரும் கனவுகள்
வரையும் கோலங்கள்
நட்சத்திர விண்மீன்கள்
தேன் சுமக்கும் வார்த்தைகள்
காதலை உரைக்கும்
காகித பூவும் வாசம் கொடுக்கும்
-சசி எழில்மணி-
திருக்கழுக்குன்றம்
இதன் பொருள் சுருக்கமாக :
காதல் வந்தால் இரகசிய கனவுகள் போர் தொடுக்கும். எண்ணங்கள் அந்த தயக்கத்தை உடைத்தெறியும்.
உதடுகள் உரசிட, கன்னம் சிவக்கும். பேசாத மௌனம் கூட நன்றாக புரியும். மனதில் காதல் புகுந்தால் காகித பூவிலும் வாசம் காணும்