நாட்டில் நேற்று (31.8.2021) கொரோனா தொற்றால் மேலும் 215 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 115 ஆண்களும் 100 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில், 30 வயதுக்கு கீழ்பட்டவர்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணுமாக 2 பேரும் 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 28 ஆண்களும், 18 பெண்களுமாக 46 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 86 ஆண்களும் 81 பெண்களுமாக 167 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய தினம் 3828 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 444 130 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 376 216 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 58 729 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.