இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,042 ஆக அதிகரிப்பு: விபரம் இதோ..!

இலங்கையில், மேலும் 05 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை(30.06.2020 காலை – 9.30) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,678 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 353 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 40 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment