இந்திய மகளிர் அணிக்கு 129 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை மகளிர் அணி 22 ஓட்டங்களால் தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. மகளிர் உலக இருபது–20 கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டி யில் நேற்று முன்தினம் ‘பி’ பிரி வில் இடம் பிடித்த இந்திய- இலங்கை மகளிர் அணிகள் மோதின.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப்பெற்றது.
அணியின் தொடக்க வீராங்கனை ஷாமரி அத்தப்பத்து (43) மற்றும் இஷானி லொக்குவாராச்சி (34) ஆகியோர் நம்பிக்கை அளிக்க ஏனைய வீராங்கனைகள் குறைந்த ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
சஷிக்கா பான்டி (22), கவூர் (17) மற்றும் மிதலி ராஜ் (16) ஆகியோரைத் தவிர ஏனைய வீராங்கனைகள் 11 ஓட்டங்களைக்கூட தாண்டாது ஏமாற்றமளித்தனர்.