தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகையையொட்டி வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்கு இலவச புடவைகள் வழங்கப்படும் என அம்மாநில அரசு சார்பில் நடைபெற்றது.
இதற்காக 200 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புடவைகள் தரும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
ஒரு இடத்தில் எதிர்ப்பார்த்ததை விட அதிக பெண்கள் புடவைகள் வாங்க குவிந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்களுக்கு புடவை கிடைக்காமல் போய்விடுமோ என பயந்த சில பெண்கள் கூட்டத்தில் முண்டியடித்தனர்.
இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து ஒருவரின் தலைமுடியை மற்றவர் இழுத்தும், கட்டி புரண்டும் பெண்கள் தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டனர்.பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை கலைத்தனர்.
இதே போல மாநிலத்தின் பல பகுதிகளில் அரசு கொடுத்த புடவைகள் மட்டமான தரத்தில் இருப்பதாக கூறி பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, புடவைகளை தீயிட்டு கொளுத்தினார்கள்.அரசு மட்டமான தரத்திலான புடவைகளை மக்களுக்கு கொடுத்ததற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது வேற சண்டை: சாறி கட்டிய பெண்களுக்கு இடையே நடக்கும் குஷ்டி சண்டை