வாகனத்தில் விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்றை வாங்கிய அதிருத்திய நபரிடம், கொள்ளை
விலையில் பணம் அறிவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அண்மித்த பகுதியில் வாகனத்தில் விற்பனை செய்யும் இளநீர் வியாபாரி ஒருவர் மோசடி விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாகம் காரணமாக விலை எதுவும் கேட்காமல் இளநீர் ஒன்றை பருகியுள்ளார். அருந்திய பின்னர் விலையை கேட்டு போது 130 ரூபா என வியாபாரி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளநீர் பருகியவர் மீண்டும் விலையை கேட்டு வாதம் செய்துள்ளார்.
எனினும் வியாபாரியின் நிலைப்பாட்டில் மாற்றமின்மையால் 130 ரூபாவை செலுத்தி விட்டு சென்றுள்ளார்.
சமகாலத்தில் இலங்கையில் தேங்காய் பாவனை மக்களின் பெரும் பொருளாதார பிரச்சினையாக மாறியுள்ளது.
கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் தேங்காய் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 65 ரூபாவுக்கு விற்பனை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 40 – 50 ரூபாவுக்கு விற்பனை செய்யும் இளநீர் 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன், அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.