இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.
ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. 4 முறையும் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை.
அதேபோல் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் காலக்கெடு விதிக்கப்பட்டது.
ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாததால் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க முடிவு செய்துள்ளன. இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன.
இப்படிப் பலவிதமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் 2-வது இடத்தைப் பிடித்த யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது. எனவே அவரை பிரதமராக தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் அங்கு கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதிய கூட்டணியில் இஸ்ரேலிய அரசியலின் வலது, இடது, மையவாதக் கட்சிகளின் பிரிவுகள் இடம்பெறுகின்றன. அரசியல் ரீதியாக இவர்களுக்கு பொதுவான கொள்கை ஏதுமில்லை. ஆனால் நெதன்யாகுவின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள்.
நெதன்யாகு எளிதில் விட்டுவிடப்போவதில்லை.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதிய கூட்டணியில் இஸ்ரேலிய அரசியலின் வலது, இடது, மையவாதக் கட்சிகளின் பிரிவுகள் இடம்பெறுகின்றன. அரசியல் ரீதியாக இவர்களுக்கு பொதுவான கொள்கை ஏதுமில்லை. ஆனால் நெதன்யாகுவின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நெதன்யாகுவால் ஆட்சியமைக்க முடியாமல் போனதால், லேபிட் ஆட்சியமைப்பதற்கு வரும் ஜூன் 2-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு அடுத்தபடியாக லேபிட்டின் யேஷ் ஆடிட் கட்சி அதிக இடங்களில் வென்றிருக்கிறது.
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பென்னெட்டின் கட்சி ஆறே இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. ஆயினும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு இது அவசியமாகி இருக்கிறது.
தொடர்ந்து மல்லுக்கட்டும் நெதன்யாகு
ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான அரசியல் காட்சிகளுக்குப் பிறகு புதிய கூட்டணி ஆட்சியமைப்பதற்கு நெருங்கியிருக்கிறது. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பிரதமர் அகற்றப்பட இருக்கிறார். ஆனால் நெதன்யாகு எளிதில் விட்டுவிடப்போவதில்லை.
புதிய கூட்டணி அறிவிப்பு வெளியானதும் நெதன்யாகு எதிர்வினையாற்றினார். புதிய கூட்டணியில் சேர வேண்டாம் என பென்னெட்டின் யாமினா கட்சியிலும், நியூ ஹோப் கட்சியிலும் உள்ள வலதுசாரிகளைக் கடுமையாக எச்சரித்தார்.
“குடியேற்றங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்” என்று வலதுசாரிகளை நோக்கி கேலியாகக் கேட்டார். புதிய கூட்டணி அரசு இஸ்ரேலின் எதிரியான ஈரானை எதிர்த்துப் போராட இயலாத பலவீனமான அரசையை அவர்களால் வழங்க இயலும் என்றும் விமர்சனம் செய்தார்.
இத்தகைய கடுமையான எதிர்வினை மூலம் நெதன்யாகுவால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடிந்தால், புதிய கூட்டணி அரசு அமைக்கும் திட்டம் ஆட்டம் காணும்.
புதிய கூட்டணி அரசு பதவியேற்றாலும்கூட அது முரண்பாடுகளின் தொகுதியாகவும் முறிந்துபோகும் தன்மை கொண்டதாகவும்தான் இருக்கும். அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பல முக்கிய விவகாரங்கள் மேலும் சிக்கலாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
பென்னெட்டுக்கு சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வழங்குவதற்கு நெதன்யாகுவின் லிகுட் கட்சி கடந்த சனிக்கிழமை ஒப்புக் கொண்டது. ஆனால் இதை பென்னெட் ஏற்கவில்லை. நெதன்யாகு இதே திட்டத்தை மீண்டும் முன்வைத்திருக்கிறார்.
இஸ்ரேலின் விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ் எந்தக்கட்சிக்கும் தனியாக பெரும்பான்மை கிடைப்பது மிகவும் கடினம். அதன் சிறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
லேபிட் ஆட்சியமைப்பதற்கு 28 நாள் அவகாசம் தரப்பட்டது. காஸாவுடனான மோதலால் இதில் இடையூறு ஏற்பட்டது. இந்தச் சண்டை காரணமாக இந்தக் கூட்டணியில் இருந்து அரபு இஸ்லாமிஸ்ட் கட்சி வெளியேறியது.