ஏமன் நாட்டின் அல்மாரா பாலைவனத்தின் நடுவே, 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும்கொண்டஒன்று இருக்கிறது.
உள்ளூர் மக்கள் இந்தக் கிணற்றை `நரகக் கிணறு’ (Well of hell) என்றே அழைக்கிறார்கள். சூரியஒளிகூட கிணற்றின் குறிப்பிட்ட அடி தூரம் வரை மட்டுமே பாய்வதால், இருள் சூழ்ந்தே காணப்படுகிறது இந்தக் கிணறு.
சமீபகாலமாக, கிணற்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே… கிணற்றுக்குள் பேய், பிசாசுகள் உலவுகின்றன என்றெல்லாம் வதந்திகள் பரவின. இதையடுத்து 10 ஆராய்ச்சியாளர்கள்,
கிணற்றுக்குள் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போதுதான் இது கிணறு அல்ல… கிணற்றை ஒத்த குகை என்கிற ஆச்சர்யத் தகவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
“இந்தக் கிணறு குகைபோல நீண்டுகொண்டே போகிறது. இது பல மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று மதிப்பிட்டிருக்கிறோம்.
சமீபத்தில் கிணற்றுக்குள் பறவைகளும், பூச்சிகளும் அதிக அளவில் இறந்திருப்பதால்தான் துர்நாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இயற்கையான இந்தக் குகைக்குள் அழகான நீர்வீழ்ச்சியும் பாம்புகளும் இருக்கின்றன. இது ஏமன் நாட்டின் புதிய அதிசயம்.
ஏமன் நாட்டுக்குப் புதிய வரலாற்றை எழுதவிருக்கும் இந்தக் குகையில் எங்கள் ஆராய்ச்சிகள் தொடரும்” என்று சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!