ஐநா தீர்மானத்துக்கு இட்டுச் சென்ற இலங்கைப் போர் – காணொளி
இலங்கைப் போர் 25 வருடங்கள் தொடர்ந்த ஒன்று. அதன் இறுதி மாதங்களில் நாற்பதினாயிரம் பேர் வரை மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது.
அந்தப் போரில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பினரும் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு இப்போது தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.
சர்வதேச மட்டத்திலான எந்தவொரு விசாரணையும் தமது நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment