ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72வது அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கிற்கு சென்றுள்ளார்.
இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன் அவரது மனைவி ஜயந்தி சிறிசேன, மகன் தஹாம் சிறிசேன மற்றும் மகள் சத்துரிக்கா சிறிசேன ஆகியோர் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் தஹாம் சிறிசேன ஐ.நா கூட்டங்களுக்கு சென்றிருந்தார்.
இலங்கையின் பிரதிநிதிகள் குழுவுடன் தஹாம் அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதனால் ஜனாதிபதி பெரும் சங்கடத்திற்கு முகம் கொடுத்திருந்தார்.
எனினும், இந்தாண்டு ஜனாதிபதியின் மனைவி, மகன் மற்றும் மகளை, ஐ.நா. தலைமையகத்தில் காண முடிந்த போதிலும் அமர்வுகளில் கலந்து கொள்வதனை காண முடியவில்லையென கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளியாகியுள்ள ஆதரங்களுக்கமைய தஹாம் சிறிசேன நியூயோர்க்கில் இருப்பது உறுதியாகியுள்ள போதிலும் அவரை இன்னமும் ஐ.நாவில் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இளைய மகள் தராணி சிறிசேனவை, பொதுமக்களிடையே அவதானிக்க முடியாவிட்டாலும், அவர்களின் சர்ச்சைக்குரிய உறவினர்களுடன் அவரும் நியூயோர்க்கில் வசிப்பதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவேற்பு உபசாரத்தில்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு உபசாரத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.