நாய்களுக்கு திருணம் செய்து வைக்கப்படுகின்றமை அபூர்வமான நிகழ்வாக உள்ள நிலையில், ஒரே சமயத்தில் சுமார் 40 நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பெருவின் தலைநகர் லிமாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் திருமண நிகழ்வின்போது திருமண பந்தத்தில் இணைந்த மேற்படி நாய்கள் தமது பாதங்களின் அச்சை திருமணப்பதிவு புத்தகத்தில் பதிந்து தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதையடுத்து அவற்றின் உரிமையாளர்களுக்கு திருமண சான்றிதழ் கையளிக்கப்பட்டது.
வளர்ப்புப் பிராணிகள் தொடர்பான கடப்பாடுகளை உரிமையாளர்களுக்கு உணர்த்தும் முகமாக இந்தத் திருமண நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகளை மேற்கொண்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.