கடன் கொடுத்தவருடன் உல்லாசம் அனுபவிக்க கூறியதால் கணவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக பெண்ணொருவர் தமிழகத்தின் சூலக்கரை பகுதி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
விருதுநகர் பாலம்மாள் நகரில் வசித்தவர் இளங்கோ(வயது 30). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சாத்தூரைச் சேர்ந்த சுவாதி (28) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணி புரிந்த இளங்கோ வெளிநாடு செல்வதற்காக தனது நண்பர் ஒருவரிடம் ரூ.3½ இலட்சம் ரூபா கடன் வாங்கியுள்ளார்.
வெளிநாட்டி லிருந்து திரும்பி வந்த பின்பு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர் மாத்திநாயக்கன்பட்டி வீதியில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இது குறித்து சூலக்கரை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
கொலையுண்ட இளங்கோவின் மனைவி சுவாதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். தொலைபேசி தொடர்புகளையும் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் இளங்கோவை கொலை செய்வதற்கு சுவாதி தான் திட்டம் வகுத்தது தெரிய வந்துள்ளது.
தீவிர விசாரணை மேற்கொண்ட தில் அவர் பொலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுவதாவது, எனது கணவர் இளங்கோ வெளிநாடு செல்லும் போது அவரது நண்பர் ஒருவரிடம் 3½ இலட்சம் ரூபா கடன் வாங்கியிருந்தார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் அவரது நண்பர் கடனை திருப்பித்தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து எனது கணவர் கடன் கொடுத்த தனது நண்பருடன் உல்லாசமாக இருக்குமாறு என்னை வற்புறுத்தி வந்தார். இதனால் நான் மன வேதனையடைந்தேன்.
சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த நல்லமுகமது என்ற அஜீஸ் (20) என்பவருடன் எனக்கு தொடர்பு இருந்தது. அவர் எனது தங்கையையும் காதலித்து வந்தார்.
நான் அடிக்கடி நல்லமுகமதுவை சந்தித்து உல்லாசம் அனுபவிப் பதுண்டு. அப்போது எனது கணவர் இளங்கோ, அவருக்கு கடன் கொடுத்த நண்பருடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துவதாக கூறினேன்.
என் கணவரை கொன்று விட்டால் நானும், எனது சகோதரியும் உங்களுடன் இருந்து விடுகிறோம் என நல்லமுகமதுவிடம் தெரிவித்தேன்.
எனது கணவரை கொலை செய்வதற்கு நல்லமுகமது ஒப்புக்கொண்டார். அதன்படி சம்பவத்தன்று இரவு நல்லமுகமது எனது தங்கையுடன் சூலக்கரை வந்துள்ளார்.
அங்கு உடனடியாக வருமாறு எனது கணவர் இளங்கோவை தொலை பேசியில் அழைத்துள்ளனர். எனது கணவரும் மோட்டார் சைக்கிளில் சூலக்கரை சென்றுள்ளார்.
நல்லமுகமது தனது நண்பர்களுடன் சேர்ந்து எனது கணவர் இளங்கோவை அடித்துக் கொலை செய்துள்ளார். எனது திட்டம் நிறைவேறியது. இவ்வாறு சுவாதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை யடுத்து, பொலிஸார் சுவாதியின் கள்ளக்காதலன் நல்லமுகமதுவை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் சுவாதி கூறியபடி தான் தனது நண்பர்கள் சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் (19), பாண்டியன்(20) ஆகிய இருவருடன் சேர்ந்து இளங்கோவை அடித்துக் கொலை செய்ததாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சுவாதி, கள்ளக்காதலன் நல்லமுகமது, அவரது நண்பர்கள் ஜெயக்குமார், பாண்டியன் ஆகிய 4 பேரையும் சூலக்கரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சிறையில் அடைத்துள்ளனர்.