மன்னார், பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் கடல் தொழிலுக்கு சென்ற நபரொருபர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் பேசாலை காட்டாஸ்பத்திரியிலிருந்து இரண்டு படகுகளில் 7 பேர் பேசாலை கடற்பகுதிக்குட்பட்ட பகுதியில் சுமார் 5 மைல் தூரம் சென்று கடல் தொழிலில் ஈடுபட்டனர்
இந்நிலையில் கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கடற்பரப்பில் தொழிலுக்கென போடப்பட்டிருந்த வலையில் சிக்குண்ட நிலையில் மீளமுடியாமல் நீரில் மூழ்கி காலை 11.00 மணியளவில் பலியாகியுள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையாகிய காட்டுராஜா நல்லதம்பி வயது 33 என்பவரே நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
கடற்றொழிலுக்கு சென்ற 6 பேருக்கும் நீந்தத் தெரியாத நிலையில் குறித்த நபரை காப்பாற்ற முடியாத நிலையில் அந்நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கடலிலிருந்து கையடக்க தொலை பேசியூடாக ஏனைய மீனவருக்கு தெரிவித்த நிலையில் அங்கு வந்த மீனவர்கள் இறந்தவரின் உடலை மீட்டு பேசாலை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர்
தற்பொழுது குறித்த நபரின் உடல் பேசாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.