காதலர் தினத்தை காதலர்கள் வௌ;வேறு விதமாக ரொமேன்டிக்காக கொண்டாட லத்தியாவைச் சேர்ந்த காதல் ஜோடிகள் அரை நிர்வாணமாக ஆகாயத்தில் குதித்து த்ரில்லான காதலர் தினம் கொண்டாடியுள்ளனர்.
த்ரில்லான இந்த காதலர் தினக் கொண்டாட்டம் டத்வியாவின் ஸிகுல்டா நகரில் இடம்பெற்றுள்ளது. கடும் குளிர் மற்றும் பனியையும் பொருட்படுத்தாது 9 காதல் ஜோடிகள் ஆகாயத்தில் குதித்து மகிழ்ந்துள்ளனர்.
ஸிகுடா நகரில் தற்போது உறைந்துபோயுள்ள கோஜா ஆற்றின் குறுக்காகச் செல்லும் கேபிள் காரிலிருந்தே இவர்கள் குதித்துள்ளனர்.
இதன்போது இந்த ஜோடிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு பிறந்த மேனியாக ஒருவரை ஒருவர் தங்கள் காதலர்களுடன் கட்டியணைத்துக்கொண்டு குதித்துள்ளனர்.
குதிப்பதற்குப் போதுமான தைரியம் இல்லாத ஜோடிகள் 15 நமிடம் பொறுமையுடன் இருந்து பின்னர் குதித்துள்ளனர். கீழே சூடான துவாய் மற்றும் சூடான பானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
‘தங்களுக்கு உயிரானவர்களுடன் புதுமையான அனுபவத்தை இந்த பங்கீ ஜம்ப் (கயிற்றில் குதித்தல்) இல் கலந்து கொண்ட காதலர்களுக்கு வழங்கியுள்ளது.
இதுபோன்ற புதுமையான அபரிமிதமான செயற்பாடுகள் வாழ்க்கையை பிரகாசமாக்கும்’ என இந்நிகழ்வை ஏற்பாடு செய்த லத்திவியன் பங்கீ ட்ரவல் ஏஜென்ஸ் நிறுவத்தின் சுற்றுலா ஏற்பாட்டாளர் ஜுரில் நெகாஜிவ்ஸ் கூறியுள்ளார்.