உறக்கத்தின்போது கணவனின் குரல்வளையை நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹவெல – பொல்வத்த பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே குமார் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்தவராவார்.
நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணை அறிக்கையில் குரல்வளை நெரிக்கப்பட்டு ஏற்பட்ட மரணம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து சந்தேக நபரான அவரின் மனைவி மாத்தளை குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சந்தேக நபர் மாத்தளை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.