கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ரொரன்டோ பகுதியிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Toronto பகுதியில் உள்ள Steeles அவன்யூ பக்கத்தில் இருக்கும் W and Keele தெருவில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் கலைச்செல்வி உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவரின் கழுத்து மற்றும் பின் பகுதியில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் கலைச்செல்வி அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா (ஓய்வுபெற்ற உப அதிபர்- புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்), தங்கம்மா (ஓய்வுபெற்ற அதிபர்- புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்,
இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷானா, கதுர்ஷன், ஜனுஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலையரசி(ஆசிரியை- கிளிநொச்சி), பத்மகாந்தன்(சுவிஸ்), கலைவதனி(கனடா), பிரேமகாந்தன்(அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா(ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர்- கிளிநொச்சி), ஜெயகெளரி(சுவிஸ்), தர்மராசா(கனடா), ஷஜனி(ஆசிரியை), இலட்சுமி(முரசுமோட்டை), தர்மலிங்கம்(வவுனியா), நடராசா(இரணைமடு), கணேஸ்வரி(இராமநாதபுரம்), பராசக்தி(இரணைமடு), சரஸ்வதி(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோகநாதன் — கனடா
தொலைபேசி: +14166617358
கலைவதனி — கனடா
தொலைபேசி: +14167407358
சரஸ்வதி — கனடா
தொலைபேசி: +14168329737
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கனடாவில் நடைபெறும்.