காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் பணம் கேட்டால் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.
நேற்று யாழ்ப்பாணம் வந்த அவர் வலி.வடக்கு காணி விடுவிப்புக் குறித்துப் பேசினார். மீள்குடியேற்றத்துக்காக ஆயிரத்து 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவையிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் 460 ஏக்கர் காணிகளை விடுவிக்கவே அனுமதி கிடைத்ததாகத் தெரிவித்தார். மயிலிட்டி, பூநகரியின் கஜூ தோட்டத்தை விடுவிக்க இராணுவம் பணம் கேட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோது “படையினர் பணம் கேட்டால் பரிசீலிக்கலாம்” என அவர் பதிலளித்தார்.