காதலிப்பதாகத் தெரிவித்து 13 மற்றும் 14 வயதுச் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 3 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என்று அவரது தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.
மறு நாள் சிறுமி வீதியில் சென்றதைத் தயார் கண்டுள்ளார்.
இந்நிலையில்,சிறுமியை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினார். அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோது, காதலிப்பதாகத் தெரிவித்து தாவடியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரிய வந்தது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞனைக் கைது செய்துள்ளோம்.
இந்நிலையில் கடந்த 24ஆம் திகதி மற்றுறொரு 13வயதுச் சிறுமி உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு தாமதமாகி வந்துள்ளார். அவரிடம் தாயார் விசாரித்தபோது, சுன்னாகத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
தாயார் முறைப்பாடு செய்தார். சிறுமியிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைவாக 18 வயதுடைய இளைஞனைக் கைது செய்தோம்.
இதேவேளை, குறித்த சிறுமியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுன்னாகத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின்போது தெரிவியவந்தது.
இதனையடுத்து குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளோம் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.