தனது அயல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி ஒருவரை இவர் காதலிப்பதாகவும் இவரது காதலை மாணவி ஏற்றுக் கொண்டதையடுத்தே நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து ள்ளார் மேற்படி மாணவர்.
இம் மாணவனின் தந்தை ஒரு கிராம சேவகராகவும் தாயும் அரச அலுவலராகவும் இருப்பதாகத் தெரியவருகின்றது. தனது தாயின் சங்கிலியை அடைவு வைத்து தனது நண்பர்களுக்கு பிரபல விடுதியில் மது விருந்து கொடுத்துள்ளான் யாழ் நகர்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன்.
2016ல் க.பொ.த. உயர்தரப்பரீட்சை எடுக்கும் 17 வயது மாணவனே இந்தத் திருவிளையாடல் புரிந்துள்ளார்.
நேற்று இரவு 8 மணியளவில் கொக்குவில் பகுதியில் உள்ள இம் மாணவனது வீட்டுக்கு ஆட்டோ ஒன்றில் நிறை வெறியில் வந்து இறங்கிய இம் மாணவனின் நண்பர்கள் ஆட்டோவினுள் மது போதையில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை கீழே இறக்க முற்பட்ட போது மாணவனின் தாயார் வெளியே வந்து மாணவனின் நிலையைப் பார்த்து அலறியதாகத் தெரியவருகின்றது.
அயலவர்களும் அங்கு கூடவே மாணவனின் நிலையை அறிந்த பெற்றோர் மாணவனை உள்ளே கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் இரவிரவாக நடந்த விசாரனையிலேயே மாணவன் தனது சங்கிலியை அடைவு வைத்துப் பணம் பெற்று விருந்து அளித்த விடயம் வெளியே வந்துள்ளது.
குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் யார்?
27-05-2014
வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
அக் குளத்திற்கு நீராடச் சென்றவர்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து பொலிசார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
குளத்தின் கரையில் அண்மித்ததாக நீருக்குள் தலையை அமிழ்த்தியவாறு குறித்த சடலம் காணப்படுகிறது. சடலம் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள பாறைப் பகுதியில் சாரம், சேட் என்பனவும் காணப்படுகிறது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் நிர்வாணமாக காணப்படுகிறது. நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தராமையால் சடலம் மதியத்தை தாண்டியும் அவ்விடத்திலேயே இருந்தது.
இதன் பின் பிற்பகல் 1 மணியளவில் வருகை தந்த திடீர் மரணவிசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் அச் சடலத்தை பார்வையிட்டதுடன் அதனை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதேவேளை, குறித்த சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. மரணம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.