பாகிஸ்தான் 25 வயது பெண் ஒருவர், காதலித்தவரை திருமணம் செய்ததாக நீதிமன்ற வளாகத்திலேயே அவரது தந்தை மற்றும் சகோதரர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் Farzana Parveen என்ற 25 வயது பெண்ணுக்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் அவர் Mohammad Iqbal என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததால் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை,மகள் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு தனது கணவருடன் வந்த Farzana Parveen அவர்களை, அவருடைய தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் 20 பேர் சேர்ந்து கல்லால் அடித்து கொலை செய்தனர்.
அவருடைய கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Farzana Parveen அவர்களின் தந்தை மட்டும் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களை பிடிக்கும் பணியில் பாகிஸ்தான் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் காதல் திருமணம்செய்யும் ஜோடிகளை கெளரவக்கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருவதாக போலீஸார் கவலையுடன் கூறுகின்றனர்.