காலியில் இடம்பெற்ற கோர விபத்து ; இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலி (படங்கள்)
குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 22 மற்றும் 18 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காரொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர்களின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment