காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளர்களில் நால்வர் இறந்து விட்டதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீடுகளில் இறந்து கிடந்த மூவரின் சடலங்களுக்கு பிசிஆர் சோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது என சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையின் 25ஆம் வார்டில் சிகிச்சை பெற்ற வந்த ஹிக்கடுவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 65 வயதுகளை உடைய ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இதேவேளை மொரவக்க சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் 55 மற்றும் 74 வயதுகளையுடைய அலபலதெனியவைச் சேர்ந்த ஒருவரும் அங்குலுகஹ பிரதேசத்தைச் சேர்ந்த மற்றையவருமே உயிரிழந்த ஏனைய இருவருமாவர்.
இதேவேளை 80 வயதுடைய அங்குலுகஹ கபரகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் வத்தேகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இரு ஆண்கள் தமது வீடுகளில் மரணித்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டனர். மேற்படி இருவரும் 82 மற்றும் 81 வயதுகளை யுடைய பொத்தல மற்றும் கொகாவல(நாவல) பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
உயிரிழந்த 7 பேருக்கும் இன்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின்படி அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.