கால்வாய்க்குள் கவிழ்ந்த கார்

கொழும்பு – 15 மட்டக்குளி காக்கைதீவு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கால்வாய் ஒன்றுக்குள் கார் ஒன்று கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் சாரதி காருக்குள் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவாசமாக உயிர்தப்பியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காரை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
குறித்த காருக்குள் சேற்று நீர் புகுந்த நிலையில் தற்போது மீட்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment