கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதில் அமைந்துள்ள தனியார் உணவாகத்தின் மதுபான சாலையில் கடந்த 14 ஆம் திகதி கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கத்தியால் குத்தியவரை அங்கிருந்த இருவர் சரமாரிகாக தாக்கியுள்ளனர் இந்நிலையில் கத்திக் குத்துக்கு இலக்கானவரும் அடிகாயத்துக்கு இலக்கானவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்நிலையில் கத்தியால் குத்தியவரும் அடிகாயத்திக்கு உள்ளானவருமான தேவசிங்கம் தீறன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
அவரைத்தாக்கிய இருவரில் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.