விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கறிகளை விற்பனைக்கு கொண்டு சென்ற சமயம் இன்று (25) சந்தைப்பகுதியில் விழுத்து உயிரிழந்துள்ளார்.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு படுதியில் வசித்துவரும் பழனியாண்டி மகேந்திரம் என்ற 66 வயதுடைய நபரே இவ்வாறு தருமபுரம் சந்தைப்பகுதியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.