ஒடிசாவில் உடல்நிலை சரியில்லாத மூதாட்டியைக் கம்பில் தொட்டில்கட்டி அதில் அவரை அமரவைத்து தூக்கிச்சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் சாலை வசதி இல்லை. கிராமத்துக்குள் வாகனங்கள் செல்ல முடியாது. அங்கு இருக்கும் மக்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூட சிரமப்படுகின்றனர்.
உடல்நிலை சரியில்லாமல்போன மூதாட்டியைக் கம்பில் தொட்டில்கட்டி, அதில் அவரை அமர வைத்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர் அவரின் உறவினர்கள்.
சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்குத் தோளில் சுமந்து சென்றுள்ளனர். அந்தக் காட்சியைச் செய்தியாளர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளத்தின் தலைவருமான நவீன் பட்நாயக்கை மக்கள் சாடி வருகின்றனர்.