உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் சில வருடங்களுக்கு முன் கூகிள் நிறுவனத்திற்குப் போட்டி போடும் விதமாக ஆள்ளில்லா கார் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறையில் ஆராய்ச்சியில் இறங்கியது.
இதனால் கூகிள் நிறுவனம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையே ஆடிப்போனது. காரணம் ஆப்பிள் நிறுவனம் தொட்டதெல்லாம் வெற்றி தான். ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் தனது ஆராய்ச்சியில் வெற்றி பெற்று இருந்தால் மொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது போல் ஆட்டோமொபைல் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பதே அவர்களின் பயம்.
கூகிள் நிறுவனத்திற்கு எதிரான திட்டத்தில் ‘தோல்வி’.. 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் ‘ஆப்பிள்’ ஆனால் தற்போது நிலையே வேறு, ஆப்பிள் நிறுவனம் ஆட்டோமோடிவ் துறையில் செய்து வந்த ஆராய்ச்சி மற்றும் திட்டங்களைக் கைவிடப் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆப்பிள் பட்டிப்படியாத இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடு மற்றும் ஊழியர்களைக் குறைத்து வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் துறையில் பணியாற்றும் 1,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் ஊழியர்கள் மட்ட அளவில் இதற்கான பணிகள் நடத்து வருகிறது.
கூகிள் நிறுவனத்திற்கு எதிரான திட்டத்தில் ‘தோல்வி’.. 1இ000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் ‘ஆப்பிள்’ 2015ஆம் ஆண்டின் கடைசியில் இந்த ஆட்டோமோடிவ் குழுவிற்குக் கடைசி வாய்ப்பு அளித்தது. ஆனால் இக்குழு தனது திறமையை நிருபனம் செய்யத் தவறியதால் இப்பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஆள்ளில்லா கார் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் மிகப்பெரிய முதலீட்டில் தொடர்ந்து மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.